உலக சுற்றுச்சூழல் தினம்.. கார்களுக்கு இலவச புகை பரிசோதனை முகாம்

By Saravana
Mahindra Scorpio
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதை பாதுகாக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு முன்னணி கார் நிறுவனங்கள் இலவச புகை பரிசோதனை செய்து தருவதாக அறிவித்துள்ளன.

மஹிந்திரா நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் கார்களுக்கு இலவச புகை பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முகாமில் புகை பரிசோதனைக்கு சான்றிதழும் சியாம் அமைப்புடன் இணைந்து மஹிந்திரா வழங்குகிறது. மேலும், காரில் அதிக புகை வராமல் இயக்குவதற்கான பராமரிப்பு முறைகள் பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு தர இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் இலவச புகை பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை இந்த முகாமுக்கு கொண்டு சென்று புகை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
On the occasion of World Environment Day Mahindra & Mahindra has begun its free vehicle emission check-up camps across the country for its customers.
Story first published: Wednesday, June 5, 2013, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X