இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களும், அவர்களின் விலையுயர்ந்த சொகுசு கார்களும்... இவை கார் அல்ல கப்பல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் பயன்படுத்தும் மற்றும் அண்மையில் புதிதாக வாங்கப்பட்ட கார்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் பலர் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின், தோனி மற்றும் இன்னாள் கேப்டன் விராட் கோலி வரை அநேகர் வாகன காதலர்களாகவே இருக்கின்றனர். இவர்களிடத்தில் சொகுசு கப்பல்களுக்கு இணையான வசதிக் கொண்ட கார்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில், தற்போது கிரிக்கெட் உலகில் புதிதாக நுழைந்திருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள் சிலரும்கூட வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களாக தென்படுகின்றனர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இளம் வீரர்கள் பயன்படுத்தும் சொகுசு கார்கள் என்னென்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மொஹமத் சிராஜ்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டில் இந்திய அணி சார்பில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஒட்டுமொத்தமாக இந்திய அணி சார்பில் கலந்துக் கொண்டது மூன்று போட்டிகள் மட்டுமே ஆகும். இந்த 3 போட்டியில் மட்டுமே அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆஸ்திரேலியா பயணம் முடிந்து நாடு திரும்பிய கையோடு அவர் பிஎம்டபிள்யூ 520டி சொகுசு காரை வங்கியதாகக் கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சிராஜ் இடத்தில் மஹிந்திர தார் காரும் இருக்கின்றது. இந்த காரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் மிக சிறப்பாக விளையாடி திறம்பட செயல்பட்ட காரணத்திற்காக மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கியது.

ஆனந்த் மஹிந்திரா இந்த காரை அண்மையில் சிராஜின் சகோதரர் மற்றும் அவரது இருவரும் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர். சிராஜ் நாட்டில் இல்லாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பரிசைப் பெற்றுக் கொண்டனர்.

சூர்ய குமார் யாதவ்
இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவரான சூர்ய குமார் யாதவ் மிக சிறந்த வலது கை பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஐபிஎல் போட்டிகளில் நீண்ட காலமாக விளையாடி வருகின்றார். சமீபத்திய இங்கிலாந்து-இந்தியா இடையிலான தொடரின்போது இந்திய தேசிய அணியில் முதல் முறையாக அறிமுகமானார்.
இந்த நிலையிலேயே இவர் தற்போது லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வெலார் காரை வாங்கியிருக்கின்றார். இக்காரை செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் இருந்தே சூர்ய குமார் பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. வெலார் எதிர்கால டிசைன் தத்பரியுடங்களுடன் உருவாக்கியிருக்கும் எஸ்யூவி ரக காராகும். உலகளவில் நல்ல வரவேற்பைப் பெறும் சொகுசு கார்களில் இதுவும் ஒன்றாகும்.

ரிஷப் பாண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த விக்கெட் கீப்பர்களில் இவரும் ஒருவர். மிக சிறந்த பேட்ஸ்மேன் என்ற புகழும் இவருக்கு உண்டு. இவரிடத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார் பயன்பாட்டில் இருக்கின்றது. உலகின் அதி-திறன் வாய்ந்த எஞ்ஜின் கொண்ட கார்களில் இதுவும் ஒன்று. இதுமட்டுமின்றி இவரிடத்தில் பென்ஸ் போன்ற பிற நிறுவனங்களின் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இஷான் கிஷான்
இந்திய கிரிக்கெட் அணியில் இவர் கடந்த மார்ச் மாதமே இணைந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களில் இவரும் ஒருவர். இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர, மிக சமீபத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு காரை அவர் வாங்கினார். இதுபோன்று வெளியுலகம் அறியாத இன்னும் சில சொகுசு கார்கள் இவரிடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி. நடராஜன்
பலரின் மனதை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தலைமுறை வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனும் ஒருவர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் திறம்பட விளையாடி காரணத்தினால் இவருக்கு மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்குவதாக அறிவித்தது.

ஆனால், இக்காரை நடராஜன் அவரது கிரிக்கெட் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்த புகைப்படங்கள் மிக சமீபத்தில் இணையத்தில் வைரலாகின. இதுதவிர வேறு ஏதேனும் கார் அவரிடத்தில் உள்ளனவா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

சர்துல் தாக்கூர்
ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து தார் எஸ்யூவி காரை பரிசாக பெற்ற இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்களில் சர்துல் தாக்கூர்-ம் ஒருவர் ஆவார். முன்னணி வீரர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் களமிறக்கப்பட்ட வீரரே சர்துல் தாக்கூர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர் மிக சாமர்த்தியா விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனைக்கே தார் காரை மஹிந்திரா பரிசாக வழங்கியது.


Click it and Unblock the Notifications








