காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிய இளைஞர்... சிசிடிவி கேமிராவில் பதிவான ஷாக் வீடியோ! இனியாவது உசார இருங்க!
காருக்குள் இருந்த கேமிராவை இளைஞர் ஒருவர் லாவமாக திருடிச் செல்லும் வீடியோக் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காரில் இருந்த பையை மர்ம நபர் ஒருவர் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் ஓர் திருட்டு நடக்குமா என்ற கேள்வியையே இந்த சம்பவம் அநேகரின் மத்தியில் எழுப்பியிருக்கின்றது.

காரை பார்க் செய்த பின்னர் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டுவிட்டதாக நம்பி காரின் உரிமையாளர் புறப்படுகின்றார். ஆனால், கார் நிறுத்தப்படுவதற்கு முன்னரே, காரின் பின் பக்க கதவை உரிமையாளருக்கே தெரியாமல் அந்த நபர் லாவகமாக திறக்கின்றார். பின்னர், காரின் உரிமையாளர் நகர்ந்ததும், காருக்குள் சென்று அதிலிருந்த பையை திருடிக் கொண்டு அவர் வெளியேறுகின்றார்.

இதுகுறித்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் ஓர் பாடமாகவே அமைந்துள்ளது. காருக்குள் இருக்கும் அனைத்தும் பத்திரமாக இருக்கும் என நம்பி வெளியேறுவோர்க்கு இந்த சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதுவரை எந்த வாகன உரிமையாளரும் கண்டிராத வகையில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பதால் பலர் இந்த வீடியோவை பார்த்து உறைந்து நிற்கின்றனர். அப்பகுதியில் சிசிடிவி இருந்த காரணத்தினாலேயே திருடப்பட்ட மர்ம நபர் இனம் காண்டறியப்பட்டிருக்கின்றார். இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல் துள்ளியமாக தெரியவில்லை.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இப்பதிவை பிரத்யேகமாக வழங்கியிருக்கின்றோம். வாகனத்தை விட்டு வெளியேறும் முன் நாம் எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காண்பிக்கின்றது. அதாவது, காரை விட்டு வெளியேறிய பின் அனைத்து கதவுகளும் லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அங்கிருந்து நகர வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது.
சிசிடிவி கேமிரா பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து குற்ற சம்பவங்கள் சற்றே குறைந்திருக்கின்றன. இருப்பினும், ஏதேனும் ஓர் மூலையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த விநோத சம்பவமும் உள்ளது. தான் சிசிடிவி கேமிரா முன் இருக்கின்றோம் என்பதைக் கூட அறியாமல் மர்ம நபர் காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிச் சென்றிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








