Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
விலை மலிவான எலெக்ட்ரிக் காருக்கு 2 நாளில் புக்கிங் ஆரம்பம்! ஷோரூம் வாசல்ல நிறைய பேர் பாய போட்டு படுக்க போறாங்க
இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு இன்னும் 2 நாட்களில் புக்கிங் தொடங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV). டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான், இந்த புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த சூழலில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் அக்டோபர் 10ம் தேதியில் (October 10) இருந்து தொடங்கப்படவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை 2 வழிகளில் முன்பதிவு செய்ய முடியும். இந்தியா முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொகை 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களில் உள்ள முன்னணி ஷாப்பிங் மால்களில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் நடப்பு அக்டோபர் மாதத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக வழங்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் எனவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும்.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். அவை XE, XT, XZ+ மற்றும் XZ+ Tech LUX ஆகும். இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும். இதில், 19.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 24 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதில், 24 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட மாடல்களின் உற்பத்திக்குதான் அதிக முன்னுரிமை வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் தேதி மற்றும் நேரம், தேர்வு செய்யும் வேரியண்ட் மற்றும் கலர் ஆப்ஷன் ஆகியவற்றை பொறுத்து, டெலிவரி செய்யப்படும் தேதி அமையும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் கொடி கட்டி பறந்து வருகிறது. டிகோர் எலெக்ட்ரிக் கார் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகியவை இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி வாங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களாக இருந்து வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மிகவும் குறைவு என்பதால், இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் போட்டி போடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தன்வசம் வைத்துள்ளது.
இந்த பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிடம் இருந்து, டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் தட்டி பறித்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. டியாகோ எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் ஆகிய புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.