ஜனவரி முதல் மாருதி கார் விலையும் உயர்கிறது!
ஜனவரி 1 முதல் கார் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி, ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துவிட்டன. இதைத்தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும் ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது.
கார் மாடல்களுக்கு தகுந்தாற்போல் 2 முதல் 4 சதவீதம் வரை கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் விரைவில் இணையும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








