இந்தியாவில் ஹூண்டாய் சொனாட்டா காரின் விற்பனை நிறுத்த முடிவு
இந்தியாவில் ஹூண்டாய் சொனாட்டா காரின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சொனாட்டா காரின் விற்பனை மிகவும் மோசமாக இருந்து வருவதை காரணமாக வைத்து விற்பனை நிறுத்தப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு இறுதியில் ஹூண்டாய் சொனாட்டா காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், எஞ்சியிருக்கும் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் ஹூண்டாய் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சொனாட்டா கார் உற்பத்தி பிரிவில், புதிய எலைட் ஐ20 காரின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









