Just In
- 36 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 54 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகை உயர்கிறது
வரும் ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகையை உயர்த்தி தருவதற்கு தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்(IRDA) திட்டமிட்டுளளது.
கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை உயர்த்தி தருவதற்கு இரிடா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வாகன காப்பீடு வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை வெகுவாக குறைக்க முடியும் என்று அந்த அமைப்பு கருதுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் வாகனம் மோதி பாதிக்கப்படும் மூன்றாவது நபர் இழப்பீடு கோர முடியும். இந்த நிலையில், விபத்தின் காரணமாக உயிரிழப்பவர்களுக்கும், நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை வெகுவாக உயர்ந்துள்ளது.
இதனால், ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி மூன்றாவது நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகையை உயர்த்த வேண்டும் என்ற காப்பீட்டு நிறுவனங்களின் கோரிக்கைக்கு இரிடா அமைப்பு செவி சாய்த்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மூன்றாவது நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகை வெகுவாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், வாகன உரிமையாளர்களுக்கு அடுத்து ஒரு கசப்பு மருந்து காத்திருக்கிறது.