Just In
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மஹிந்திரா ரேவாவின் டிரைவரில்லாமல் இயங்கும் கார்... சோதனைக்கு ரெடி!
டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை சோதனை நடத்துவதற்காக, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் அரசுகளிடம் மஹிந்திரா ரேவா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளிடம் மஹிந்திரா ரேவா நிறுவனம் கான்செப்ட் கார் விபரங்களை சமர்ப்பித்துள்ளது.
மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் எக்கானமிக் டைம்ஸ் இதழிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்த தகவல் உலக ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை மஹிந்திரா பக்கம் திருப்பியிருக்கிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
பெங்களூரில் தயாரிப்பு
பெங்களூரிலுள்ள மஹிந்திரா ரேவா மின்சார கார் தொழிற்சாலையில், இந்த புதிய டிரைவரில்லா கார்கள் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் புரோட்டோடைப் மாடல்களை பொது சாலைகளில் வைத்து சோதனை நடத்துவதற்காக இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் அரசிடம் மஹிந்திரா ரேவா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கா, புரோட்டோடைப் மாடலின் விபரங்களுக்கான ஆதாரங்கள் அரசுகளிடம் சமர்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
டிரைவரில்லா தொழில்நுட்பம்
இந்த டிரைவரில்லா கார்களில் கூடுதலாக சென்சார்கள், கேமராக்களை பொருத்தியிருப்பதுடன், காரை கட்டுப்படுத்துவதற்கான சாப்ட்வேருடன் கூடிய சிறிய கம்ப்யூட்டருடன் பொருத்தப்பட்டு பெங்களூர் ஆலையில் முதல்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, சிங்கப்பூர் அரசுகள் அனுமதி வழங்கியவுடன் அங்கு வைத்து பொது சாலைகளில் சோதனைகளை நடத்த மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது.
டெக் மஹிந்திரா பங்களிப்பு
பெங்களூரில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையம் மற்றும் டெக் மஹிந்திரா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து டிரைவரில்லா காருக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதுடன், அதனை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிலை மாடல்
புரோட்டோடைப் மாடல்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பின்னர் தயாரிப்பு நிலை மாடலை வெளியிட மஹிந்திரா ரேவா திட்டமிட்டிருக்கிறது. தயாரிப்பு நிலை மாடல் வெளியிடுவதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் பிடிக்கும் என மஹிந்திரா ரேவா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தகவல் திரட்டும் பணிகள்
தற்போது 2,000 மஹிந்திரா ரேவா இ2ஓ மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களில் டிரைவரில்லாமல் இயங்கும் காருக்கு தேவையான விபரங்களை பெறுவதற்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம். இந்த சென்சார்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து டிரைவரில்லா கார் சாஃப்ட்வேரை மேம்படுத்தி வருவதாகவும் மஹிந்திரா ரேவா அதிகாரி கூறியிருக்கிறார்.
சவால்
டிரைவரில்லா கார்களை தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரிய சவால், ஒவ்வொரு நாட்டின் விதிமுறைகளுக்கு தக்கவாறு மாற்றுவதே என தகவலை வெளியிட்ட அதிகாரி கூறியிருக்கிறார். மேலும், இங்கிலாந்து, சிங்கப்பூர் நாடுகளில் சாலை சோதனை ஓட்டங்கள் முடிந்த பின்னர், இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்றவாறு காரில் மாற்றங்களை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
பரிசுப் போட்டி
டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை தயாரிப்பதற்காக ஒரு பரிசுப்போட்டியை ஏற்கனவே மஹிந்திரா சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன்படி, இந்திய போக்குவரத்து நிலைகளுக்கு ஏற்ற டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை உருவாக்கி தர வேண்டும். இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 7 லட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டி 3 ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் இந்திய நிறுவனம்
கூகுள், தெஸ்லா, ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், நிசான் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் தற்போது இந்தியாவின் மஹிந்திரா நிறுவனமும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க உள்ளது. இதன்மூலம், டிரைவரில்லா காரை தயாரிக்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையை மஹிந்திரா பெற உள்ளது.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!