பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்றம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தபட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் என இரண்டிற்குமான விலைகள் உயர்த்தபட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 87 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், விதிக்கப்படும் வரிகள் பொறுத்து அந்தந்த இடங்களில் இவற்றின் விலைகள் வேறுபடுகிறது.
முன்னதாக, பெட்ரோல் விலை நாடு முழுவதும் குறைக்கப்பட்டிருந்தது. டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தது.

இந்த விலை மாற்றங்கள், ரூபாய்க்கும்-டாலருக்கும் இடையேயான அந்நிய செலாவணி பரிவர்த்தனை வீதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பொறுத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








