இந்தியாவில், டொயோட்டா கரொல்லா கார்களுக்கு மீண்டும் ரீகால்!
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கரொல்லா கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008 ஜூலை வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கரொல்லா கார்களின் முன்புற பயணி அமரும் பக்கத்திற்கான ஏர்பேக்கில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த தொழில்நுட்ப பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, டொயோட்டா கரொல்லா கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இந்த ஏர்பேக்குகளை ஜப்பானை சேர்ந்த தகட்டா நிறுவனம் சப்ளை செய்துள்ளது.
இதே பிரச்னைக்காக லக அளவில் 2.86 மில்லியன் கார்களை டொயோட்டா திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே ஆண்டிற்குள் இந்தியாவில் மூன்று முறை டொயோட்டா கரொல்லா கார்கள் திரும்ப அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








