ஆன்லைனில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையை துவங்கும் டொயோட்டா!
ஆன்லைன் மூலமாக கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனையை டொயோட்டா விரைவில் துவங்க உள்ளது.
டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக பெங்களூர் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆன்லைன் மூலமாக உதிரிபாகங்கள் வாங்கும் முறையை டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது. இது வெற்றிபெறும் பட்சத்தில் இதர பெருநகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஆன்லைனில் வாங்கப்படும் உதிரிபாகங்களுக்கு வாரண்டியுடன், சரியான விலையில் பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த முறையில், கார்களுக்கான 30 ஆக்சஸெரீகளையும், அடிக்கடி மாற்ற வேண்டிய 400 வகையான உதிரிபாகங்களையும் வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்து பெற முடியும்.


Click it and Unblock the Notifications








