Just In
- 40 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலகின் முதல் தானியங்கி வாடகை கார் சிங்கப்பூரில் அறிமுகம்...!!
சென்னையின் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு மட்டுமே கொண்டது சிங்கப்பூர். ஆனால், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்தி்லும் மிகப் பெரிய சக்தியாக அந்நாடு உருவெடுத்துள்ளது. வெட்டவெளியாகக் கிடந்த தரிசு நிலங்களெல்லாம் எட்டடுக்கு மாளிகைகளாக அங்கு மாறியிருக்கின்றன.
சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தவர் லீ குவான் யூ. இவரது காலத்தில்தான் வளர்ச்சியில் வெற்றி நடைபோடத் தொடங்கியது அந்நாடு. வெறும் காடாக இருந்த தேசத்தை, இன்று உலகமே திரும்பிப் பார்க்கிறது. கடின உழைப்பு, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி ஆகியவையே சிங்கப்பூரின் வெற்றிக்குக் காரணம். அந்த வரிசையில் இப்போது அடுத்த மைல் கல்லை எட்டியுள்ளது அந்நாடு.
பல்வேறு முன்னணி நிறுவனங்களெல்லாம் ஆட்டோமேடிக் கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, சி்ங்கப்பூரில் அந்த டெக்னாலஜியில் வடிவமைக்கப்பட்ட டாக்ஸி பொதுமக்கள் பயன்பாட்டுக்கே வந்துவிட்டது.
நூ-டொனாமி என்ற ஆட்டோமொபைல் நிறுவனம்தான் இந்த தானியங்கி காரை வடிவமைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் இந்த ஆட்டோமேடிக் டாக்ஸி சேவை சிங்கப்பூரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
முதல்கட்டமாக 2.5 சதுர மைல்கள், அதாவது 6.4 சதுர கிலோ மீட்டர்கள் வரை இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோமேடிக் டாக்ஸி சேவைக்கு ஒன் நார்த் என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வழித்தடத்திலான சேவையை மட்டுமே தற்போது அந்நிறுவனம் வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் அதனை மேலும் பல வழித்தடங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு போன் கால் செய்தால் போதும், உங்களைத் தேடி இந்தக் ஆட்டோமேடிக் டாக்ஸி வருமாம். டிரைவரே இல்லாத டாக்ஸி என்றாலும், அந்தக் காரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவியாளர் ஒருவர் அதனுடன் வருவார். பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக இப்படி ஒர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தானியங்கி டாக்ஸியில் பயணம் செய்ய அனைவரும் போட்டா போட்டி போடுவதால், தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே தானியங்கி டாக்ஸியில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மொத்தத்தில், சிங்கப்பூரில் அறிமுகமான இந்த சேவை நாடு கடந்து அனைத்து இடத்திலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?