பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனத்தின் 500-வது ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது
பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம், தங்களின் 500-வது ஃபேமிலி சேனல் ஸ்டோர் திறந்துள்ளனர். பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம், இந்தியாவில் மிகவும் புகழ்மிக்க டயர் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா 500-வது ஃபேமிலி சேனல் ஸ்டோர் திறந்ததன் மூலம், மிகவும் விரிவான டீலர்ஷிப் நெட்வர்க் கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா பயனியர் கார்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா, நகரங்களிலும், தொலைதூர பகுதிகளிலும் தங்கள் ஃபேமிலி சேனல் ஸ்டோர்களை நிறுவியுள்ளனர்.

பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம், 5 ஆண்டுகள் என்ற மிக குறுகிய காலகட்டத்தில், இந்த 500 ஸ்டோர்களை இந்தியா முழுவதும் ஸ்தாபித்துள்ளனர். இதில், 200-க்கும் கூடுதலான ஸ்டார்கள் நகர்புறங்களில் அமைந்துள்ளது. எந்த ஒரு பிராண்டுக்கும் இது மிகப்பெரிய சாதனை ஆகும்.

பிரிட்ஜ்ஸ்டோன் ஃபேமிலி சேனல் ஸ்டோர்கள், டயர்கள் வாங்கும் அனுபவத்தில், புரட்சி புகுத்தும் வகையியல் அமைந்துள்ளது. பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்வது, தங்கள் தயாரிப்புகள் மீதான நம்பிக்கைதன்மையை அதிகரிப்பது, தங்களின் ஸ்டார்களின் உள்ளேயும், வெளியேவும் சுற்றுசூழலுக்கு இனக்காமான பொருட்களை பிரபரலபடுத்துவது உள்ளிட்டவை, பிரிட்ஜ்ஸ்டோன் ஃபேமிலி சேனல் ஸ்டோர்களின் முக்கியமான நோக்கங்களாக உள்ளன.

பிரிட்ஜ்ஸ்டோன் ஃபேமிலி சேனல் ஸ்டோர்களில், வீல் பேலன்சிங், வீல் அலைன்மன்ட், டயர் சேஞ்சிங், அல்லாய் வீல்கள் உள்ளிட்ட பிற ஏராளமான சேவைகளையும் பெறலாம். இங்கு ஸ்டைலிஷான இன்டீரியர் மற்றும் நட்புணர்வு மிகுந்த சூழல் உள்ள்ளது.


Click it and Unblock the Notifications









