பிஎஸ்-6 வரைமுறைகள், கனரக வாகனங்கள் வெளியிடும் மாசு வெளிபாடு அளவுகளை 50% குறைத்துவிடும்

By Ravichandran

பிஎஸ்-6 வரைமுறைகள், கனரக வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு வெளிபாடு அளவுகளை பாதிக்கு மேல் குறைத்துவிடும் என சுற்றுசூழல் துறைக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.

பிஎஸ்-6 வரைமுறைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பாக, பிரகாஷ் ஜாவ்டேகர் மக்களவையில் உரை நிகழ்த்தினார். 2020-ஆம் ஆண்டிற்குள் பிஎஸ்-4 வரைமுறைகளை நடைமுறைபடுத்தினால், கன ரக வாகனங்களில் இருந்து வெளியாகும் நுண் துகள்கள் அளவு, 50 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துவிடும் என ஜாவ்டேகர் தெரிவித்தார்.

பிஎஸ்-5 வரைமுறைகளை நடைமுறைபடுத்த முயற்சிக்காமல், நேரடியாக பிஎஸ்-6 வரைமுறைகளை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொண்டால் மிகுந்த நன்மை பயக்கும் என ஜாவ்டேகர் கூறினார்.

bs-vi-norms-woud-halve-pollution-from-heavy-diesel-vehicles

இப்படி செய்வதன் மூலம், டீசல் அடிப்படையிலான கனரக வாகனங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்ஸைட் (NOx-Nitrous Oxide) அளவுகள் 88.5 சதவிகிதம் குறையலாம். மேலும், மொத்த நுண் துகள்கள் அளவு 50 சதவிகிதம் குறையலாம் என பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவித்தார்.

பிஎஸ்-6 வரைமுறைகளுக்கு உட்பட்ட எரிபொருள்களை தயாரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்க சுமார் 80,000 கோடி ரூபாய் செலவாகலாம். இதில், பிஎஸ்-6 வரைமுறைகளுக்கு உட்பட்ட பெட்ரோல் தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்க 20,000 கோடி ரூபாயும், டீசல் தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்க 60,000 கோடி ரூபாயும் செலவாகலாம் என பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
BS-VI Norms are expected to halve Pollution Levels from Heavy Diesel Vehicles. Environment Minister Prakash Javadekar informed in Lok Sabha that, government's decision to implement BS-VI norms by 2020 will help to achieve an overall drop of 50 percent in emissions of particulate matter by heavy diesel vehicles. To know more about this, check here...
Story first published: Wednesday, March 16, 2016, 20:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X