Just In
- 59 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உற்பத்தி செலவு அதிகரிப்பு... கார்களின் விலை உயர்கிறது...!
சர்வதேச அளவில் பொருளாதார நிலை மந்தமடைந்து வந்தாலும், இந்தியாவில் தொழில் உற்பத்தி வளர்ச்சியடைந்து கொண்டேதான் வருகிறது என்று நாள்தோறும் மத்திய அரசு பெருமிதம் தெரிவித்து வருகிறது.
உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்ட சுணக்கம் நம்மை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு தாக்கம் கார் உற்பத்தித் துறையிலும் எதிரொலிக்கப் போகிறது. புரியவில்லையா?... கார்களின் விலையை உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறதாம்.
அதற்குக் காரணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூலப்பொருள்களின் விலை உயர்ந்ததுதானாம். அதி நவீனத் தொழில்நுட்பத்திலான காராக இருந்தாலும் சரி, ஆரம்ப நிலை காராக இருந்தாலும் சரி, அவற்றை உற்பத்தி செய்ய முக்கியமாகத் தேவைப்படும் மூலப்பொருள்கள் உருக்கு (ஸ்டீல்), ரப்பர், அலுமினியம் மற்றும் செம்பு ஆகியவைதான்.
கடந்த ஆறு மாதங்களுக்குள் ஸ்டீல் விலை 36 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர, மூன்று ஆண்டுகளாக குறைவாக இருந்த ரப்பர் பொருள்களின் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் விர்ரென உயர்ந்துள்ளது.
செம்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்டவையும் சராசரி விலை அளவைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கார்களை உருவாக்குதற்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாம்.
அதை ஈடுகட்டுவதற்காக பண்டிகைக் காலத்தைக் காரணம் காட்டி கார்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாம் சில நிறுவனங்கள்.
இந்த விலை உயர்வு கடைசியாக வாடிக்கையாளர்கள் தலையில்தான் வந்து விடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், கூடுமான வரையில் மூலப்பொருள் விலையேற்ற சுமைகளை ஏற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே கார்களை விற்க முயல்வோம் என்று ஹுண்டாய் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விற்பனைப் பிரிவு) ராகேஷ் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.
பழைய விலையிலேயே கார்களே விற்பது சற்று சவாலான காரியம்தான் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோல், மஹிந்திரா கம்பெனி கார்களின் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் பிரவீண் ஷா, மூலப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால் வேறு வழியின்றி கார்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வதை நினைத்துப் பார்த்தால், நடுத்தர வர்க்க மக்களின் கார் வாங்கும் ஆசைகள், வெறும் கனவாய்ப் போய் விடுமோ என்ற ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!