கார் ஃப்ரீ டே நிகழ்ச்சியின் 6-ஆம் பதிப்பு, மார்ச் 22-ல் டெல்லியில் அனுசரிப்பு
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தான், டெல்லியை ஆளுகிறது. ஒவ்வொரு மாதமும், 22-ஆம் தேதி டெல்லியில் 'கார் ஃப்ரீ டே' (கார்கள் இல்லாத தினம்) என்ற ஒரு தினத்தை அனுசரிக்கின்றனர்.
இது 6-வது பதிப்பாகும். இந்த மாதத்திறகான 'கார் ஃப்ரீ டே' - 22-ஆம் தேதி (நாளை) அனுசரிக்கபடுகிறது. டெல்லி அரசு இதற்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த உள்ளது. இந்த முறை, இந்த அணிவகுப்பில் நிகழ்ச்சியில் சிறிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இந்த முறை பொதுமக்களுக்கு மத்தியிளும் இந்த விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தபடுகிறது.
'கார் ஃப்ரீ டே' நிகழ்ச்சியின் 6-வது பதிப்பு, வட-கிழக்கு டெல்லியில் உள்ள ஷாஹ்தரா பகுதியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர்கள் மக்களிடம் பொது போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியதுவத்தை எடுத்து விளக்குவர். இந்த நடவடிக்கைகளின் நோக்கமே, பொது போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரித்து, டெல்லியில் கூடி கொண்டே வரும் காற்று மாசு அடைதலை குறைக்க வேண்டும் என்பதாக தான் உள்ளது.

கார் ஃப்ரீ டே, டெல்லியில் மார்ச் 22-ஆம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நாளில் மக்கள், தங்களின் தனிபட்ட வாகனங்களை உபயோகிக்க வேண்டாம் என கேட்டுகொள்ளபடுகின்றனர். இதனால், 2 நன்மைகள் நடைபெறுகிறது. முதலாவதாக, போக்குவரத்து நெரிசல் குறைகிறது. இரண்டாவதாக, காற்று மாசு அடைவது குறிப்பிடப்படும் அளவிற்கு குறைகிறது.


Click it and Unblock the Notifications








