Just In
- 34 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
விரைவில் இந்தியாவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!
ஜப்பான் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா, இந்திய மார்க்கெட்டில் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்க அனைத்து வகையான அஸ்திரங்களையும் ஏவி வருகிறது.
தில்லியில் 2000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் எஞ்சின் வாகனங்களுக்குத் தடை போடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து 1400 சிசி திறனுடைய எஞ்சின்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது அந்நிறுவனம். இதைத் தவிர பல புதிய மாடல்களையும், தொழில்நுட்பங்களையும் களமிறக்குவதாகவும் தெரிவித்தது.
இந்த நிலையில், டொயோட்டா நிறுவனத்தின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலான ஃபார்ச்சூனரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது.
ஃபார்ச்சூனருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதிலேயே பெட்ரோல் மாடல் காரை அறிமுகப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தில் வடிவமைத்தால், அதற்கும் வாடிக்கையாளர் வரவேற்பு அளிப்பார்கள் என நம்புகிறது டொயோட்டா நிறுவனம்.
அதன் யூகம் ஓரளவு சரிதான். அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் காருக்கு ஆட்டோ மொபைல் உலகில் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்தத் தருணத்தில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது டொயோட்டா நிறுவனம்.
அதாவது, புதிய ஃபார்ச்சூனர் மாடல் கார் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப்போகிறது என்ற விஷயத்தை உறுதிபடுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த மாடலின் உற்பத்தி தொடங்கும் என்றும், டிசம்பருக்குள் மார்க்கெட்டில் மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் கார் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 2.7 லிட்டர் திறனுள்ள 4 சிலிண்டர் விவிடி - ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 162 பிஎச்பி பவரையும் மற்றும் 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 5 மேனுவல் கியர்கள் மற்றும் 6 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அதே போல் மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் காரில், டீசல் எஞ்சினிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2.4 லிட்டர் ஜிடி எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் எஞ்சின்கள் அதில் பொருத்தப்படலாம் எனத் தெரிகிறது.
புதிய மாடலில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்டவை வெளியான பிறகே, அதன் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயருகிறதா? இல்லையா? என்பதை அறிய முடியும். காத்திருப்போம் அதுவரை...
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்