Just In
- 12 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஃப்யூவல்செல் டெக்னாலஜியை மேம்படுத்த ஃபோர்டு நிறுவனத்துக்கு 60 லட்சம் டாலர்கள் நிதி உதவி
நம்மைச் சுற்றி இருக்கும் இந்த புற உலகில், பார்க்கும் விஷயங்கள் எல்லாம் மெல்ல மெல்ல நஞ்சேறிக் கொண்டே வருகின்றன. உண்ணும் உணவு கலப்படமானது: குடிக்கும் நீர் அமிலமானது: சுவாசிக்கும் காற்று ரசாயனத்தின் நெடியாக மாறியது: மக்களின் மனிதாபிமானம் மாசுபட்டது: இத்தனைக்கும் நடுவே சுழன்று கொண்டேதான் இருக்கிறது இந்த உலகம்...
நீரையும், காற்றையும் மானபங்கப்படுத்தினால், மண்ணை மட்டுமன்றி நம் அடுத்த தலைமுறையையும் அவை மலடாக்கி விடும் என்பது புரிவதில்லை இந்த மானுடத்துக்கு. அதிலும் குறிப்பாக காற்றை மிக அலட்சியமாக நாம் துகிலுரிக்கிறோம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் வெளிவந்த உண்மை, நமது முகத்தில் அறைவது போல இருந்தது. நிலைமை இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் சுவாசிக்கும் காற்றே நமக்கு எமனாக மாறிக் கொல்லும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் அபரிதமான கரியமல வாயுதான் இந்தச் சூழலை காயப்படுத்துகிறது என்பது நிஜம். இதற்கு தீர்வு காண்பது எப்படி? அதில் அனைவருக்கும் பங்களிப்பு உள்ளது. அரசு, தனியார் நிறுவனங்கள் முதல் வெகுஜனம் வரை.
அப்படி ஒரு சமூகப் பங்களிப்பை அமெரிக்க அரசு அண்மையில் மேற்கொண்டுள்ளது. அதாவது ஃபூயல் செல் (எரிபொருளில் இருந்து வேதியியல் மாற்றம் வழியே மின்சக்தியை உருவாக்குது) முறையை கார்களில் புகுத்துவதற்கான ஆய்வை ஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதி்ப்பில்லாத கார்களாக அவை இருக்கும் என நம்பப்படுகிறது.
அந்த ஆய்வுக்காக 60 லட்சம் டாலர்களை அமெரிக்க அரசு ஃபோர்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதைக் கொண்டு ஆராய்ச்சிப் பணிகளை விரைந்து நடத்துமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்துப் பதிவு செய்த அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பிரதிநிதி டெப்பி டிங்கல், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம் என்பதால், அந்தப் பணியை செய்து கொண்டிருக்கும் ஃபோர்டு நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தத் தொகையை வைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு குறைந்த விலையில் ஃபூயல் செல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாம் ஃபோர்டு நிறுவனம்.
சரி, இந்தியாவில் அப்படி ஏதாவது அரசு ஊக்கம் வழங்குகிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். அப்படி எதுவுமே இல்லை... இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களுக்காக இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதே நமது இப்போதைய எதிர்பார்ப்பு...
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு