Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பட்ஜெட் எதிரொலி: ஹூண்டாய் கார்களின் விலை எக்கச்சக்கமாக உயருகிறது
பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, அனைத்து கார்களின் விலையையும் கணிசமாக உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சமீபத்தில் தான், டாடா மோட்டார்ஸ் தங்கள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் வழங்கப்படும் அனைத்து மாடல்களின் விலைகளையும் உயர்த்தியது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் சார்பாக, இந்தியாவில் விற்கபடும் அனைத்து மாடல்ககளின் விலைகளையும் உயர்த்த உள்ளதாக அறிவித்தது.
தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் விலைகளையும் 30,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
இயான் முதல் சாண்டா பீ வரை அனைத்து மாடல்களும் இந்த விலைஉயர்வில் அடங்குகிறது. இந்த விலைஉயர்வு, இந்திய வாகன சந்தைகளில் ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளின் ஒட்டுமொத்த விற்பனையை பாதிக்க உள்ளது.
ஹூண்டாய் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் செய்யபடும் இந்த விலைஉயர்வுக்கு காரணம், மத்திய அரசு மூலம் விதிக்கபடும் "இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ்" என்ற வரி தான் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான 2016 யூனியன் பட்ஜெட்டின் அடிப்படையில், ஆட்டோமொபைல்களின் மீது வெவ்வேறு நிலைகளில் வேறுபடும் வரிகள் விதிக்கபடுகிறது.
மேலும், சர்வதேச பொருளாதாரங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும், கார்கள் தயாரிக்க தேவைப்படும் உள்ளீடுகளின் விலைஉயர்வும், ஹூண்டாய் நிறுவனம் செய்துள்ள விலையேற்றங்களை நியாயபடுத்த வசதியாக அமைந்துள்ளது.
இனிமேல், வெளியாகும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகளும், அறிமுகம் செய்யபடுவதற்கு முன்பே விலையேற்றத்திற்கு உட்படுத்தபட்ட பின்னரே அறிமுகம் செய்யபட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஹூண்டாய் நிறுவனம் ஏராளமான புதிய மற்றும் விரைவில் வெளியாக உள்ள மாடல்களை அறிமுகம் செய்தது.
இவற்றில், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விரைவில் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும். இந்த நிலையில், சொகுசு கார்களின் மீதான வரி கூட்டபட்டுள்ளதால், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் விலைகள் எதிர்பார்த்ததை விட விலை உயர்ந்ததாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.