Just In
- 59 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
லிமிடெட் எடிசனாக வருகிறது ஸ்கோடா ஆக்டாவியா பிளாக்
வாடிக்கையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள ஸ்கோடா நிறுவனம், அடுத்த ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் 4 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதில் ஒன்று பிரத்யேகமான கருப்பு வண்ண ஆக்டாவியா. லிமிடெட் எடிசனாக வரும் இந்த காருக்கு இப்போதே டிமாண்ட் உருவாகியுள்ளது. ஸ்கோடா அறிமுகப்படுத்திய ஸ்டேண்டர்டு மாடல் ஆக்டாவியாவுக்கு மார்க்கெட்டில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததன் விளைவுதான் இந்த புதிய கருப்பு வண்ண மாடல்.
அதேவேளையில், தற்போது உள்ள ஆக்டாவியாவைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்கள், வடிவமைப்பு வித்தியாசம் ஆகியவற்றுடன் புதிய மாடல் களமிறங்கவுள்ளது. வெளிப்புறத்தில் உள்ள பம்பர் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்குகளும் பிளாக் ஷோடோவில் அமைந்துள்ளன. இண்டீரியரை எடுத்துக் கொண்டால், டார்க் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த காரில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் டிரைவிங் மோட் ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பதுதான். அதற்கு ஏதுவாக டைனமிக் சேசிஸ் கண்ட்ரோல் (டிசிசி) வசதி ஆக்டாவியா பிளாக்கில் உள்ளது.
ஈகோ, கம்ஃபர்ட், நார்மல், ஸ்போர்ட், இண்டிவீஜுவல் என ஐந்து ஆப்ஷன்களில் டிரைவிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் எந்த மோடை ஆன் செய்தாலும், அதற்கு தகுந்தவாறு ஸ்டீயரிங்கும், சஸ்பென்சனும் கண்ட்ரோல் ஆகிவிடும். உதாரணமாக ஸ்போர்ட் மோட் என எடுத்துக் கொண்டால், அதற்கு ஏற்றவாறு ஸ்டீயரிங் கண்ட்ரோல் கிடைக்கும்.
அதேபோல் இதற்காகக் கொடுக்கப்பட்ட பொத்தானை அழுத்தினால் சஸ்பென்சனுக்குப் போகும் ஆயிலின் அளவும் கட்டுப்படுத்தப்படும். மொத்ததில் அல்ட்ரா மாடர்னாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மார்க்கெட்டுக்கு வரப்போகிறது புதிய ஆக்டாவியா.
பிளேக் எடிசன் ஆக்டாவியாவைத் தவிர, 7 இருக்கைகள் கொண்ட கொடியாக், ஆர் வேரியண்ட் ஆக்டாவியா, ரேபிட் மாண்ட் கார்லோ ஆகிய மாடல்களும் இந்தியாவுக்கு வரவுள்ளன.
இதைத் தவிர விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குவதற்கான சர்வீஸ் சென்டர்களை அமைக்க ரூ.100 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாம் ஸ்கோடா. மொத்தத்தில் அடுத்த ஆண்டு மேலும் பல புதுமைகளுடன், வாடிக்கையாளர்களின் சேவைத் தரத்தை உயர்த்த பல்வேறு அதிரடித் திட்டங்களை வகுத்துக் காத்திருக்கிறது ஸ்கோடா.