Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதும் விபத்துக்களுக்கான முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் விதமாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நாடுமுழுவதும் தினசரி சராசரியாக 1,400 விபத்துக்கள் நடப்பதாகவும், 400 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாலேயே நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான சந்திரசூட் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த மனுவின் மீதான விசாரணை முடிவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது. வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்பட வேண்டும்.
மதுக்கடைகள் இருப்பதை தெரிவிக்கும் வகையிலான விளம்பர தட்டிகள் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் நெடுஞ்சாலைகளில் வைக்கவும் கூடாது, கண்ணில் தென்படக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2,000 மதுக்கடைகள் வரை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!