Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 3 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 4 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 4 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- News திருவண்ணாமலையில் "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாம்.. பார்த்தீங்களா?
- Movies ஹீரோவான லோகேஷ் கனகராஜ்.. கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
டெல்லியில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை!
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்துள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்யவும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அபாயகரமான அளவை எட்டியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபடுவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக, டீசல் வாகனங்கள் அதிக புகை வெளியேற்றுவதாக கருதி, அந்த வாகனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது. மேலும், 2,000சிசி திறன் கொண்ட டீசல் கார்களை பதிவு செய்யவும் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்துள்ளது.
மேலும், அந்த வாகனங்களின் பதவை ரத்து செய்யவும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம், அந்த வாகனங்கள் குறித்த பட்டியலை போக்குவத்து போலீசாரிடம் வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தடையால் டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் டீசல் காரை பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.