Just In
- 36 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 53 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பெங்களூரில் டிரைவரைத் தாக்கி விட்டு காரை அபேஸ் செய்த நைஜீரிய போதை இளைஞர்...!!
நைஜீரியா.... கறுப்பின தேசமாக இருந்தாலும் பல கலாசாரங்களும், வனம் சார்ந்த இயற்கைச் சூழலும் கொண்ட அழகான நாடு.
முன்பெல்லாம் அந்த நாட்டின் பெயரைக் கேட்டாலே அங்குள்ள மக்களும், அதன் இயற்கை வளங்களுமே கண் முன்னால் வந்துபோகும். ஆனால், சமீபகாலமாக அந்த நிலையை மாற்றிவிட்டார்கள் அந்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள்.
ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல் திருட்டு செய்வது, ஆன்-லைன் மூலமாக பணம் திருடுவது என நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் செய்யும் குற்றஙகள்தான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகின்றன. அதுதொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த பலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் புதிதாக பெங்களூரில் ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றிருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று, அதிகாலை 3 மணிக்கு சாலை ஓரத்தில் காரை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கால் டாக்ஸி ஓட்டுரை தாக்கவிட்டு, அந்த காரே அபேஸ் செய்திருக்கிறார் நைஜீரிய இளைஞர் ஒருவர்.
பெங்களூரின் பென்னார்கெட்டா சாலையில் அமைந்துள்ள பிலேகாஹல்லி சிக்னல் அருகே தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை அணுகிய போதை இளைஞர் ஒருவர் கார் சாவியைத் தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர் மறுக்கவே, டிரைவரை வயிற்றில் தாக்கிவிட்டு சாவியைப் பிடுங்கிக் கொண்டு காருடன் எஸ்கேப் ஆகியிருக்கிறார் அந்த நைஜீரிய இளைஞர். இதுகுறித்து தகவலறிந்த பெங்களூரு போக்குவரத்து காவல் துறை, துரிதமாக செயல்பட்டு 3 மணி நேரத்துக்குள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அது எங்கு பயணிக்கிறது என்பதை அறிந்து கொண்ட போலீஸார், அந்த நபர் செல்லும் வழியில் வலை விரித்துக் காத்திருந்தனர்.
ஹென்னூரிலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டிக்குச் செல்லும் வழியில் அந்த போதை இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர் போலீஸார். விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் அப்துல் முல்லாலபி (33) என்பதும், பெங்களூரின் ஏலஹங்காவில் உள்ள மேலாண்மையியல் பல்கலைக்கழகத்தில் அவர் இளங்கலைப் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு வழியனுப்பி வைத்தனர்.
சாலை ஓரத்தில் தூங்கினால், ஒன்று காரை ஏற்றி கொலை செய்கிறார்கள் அல்லது காரையே லவட்டி விடுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்கின்றனர் சாமானிய இந்திய மக்கள்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு