Just In
- 29 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 59 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அலர்ட்: ஜனவரி முதல் டாடா கார்களின் விலை உயர்கிறது!
ஜனவரி முதல் டாடா கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
டாடா டியாகோ கார் கொடுத்த உற்சாகத்தில் முதல் ஆளாக விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
வரும் ஜனவரி 1ந் தேதி முதல் அனைத்து கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடலுக்கு தக்கவாறு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கார்கள் விலை உயர்த்தப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. இது புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைவர் மாயன் பரீக் கூறுகையில்," கார் தயாரிப்புக்கு தேவையான உலோகங்கள், ரப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதையடுத்து, கார் விலையை உயர்த்தும் நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.
எங்களது கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறது. குறிப்பாக, டியாகோ காருக்கான டிமான்ட் மாதத்துக்கு மாதம் அதிகரித்து வருகிறது. அடுத்ததாக ஜனவரி மாதத்தில் ஹெக்ஸா காரை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்," என்று மாயன் பரீக் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு துவங்கும்போது கார் விலைகளை உயர்த்துவது கார் நிறுவனங்களின் வாடிக்கையான நடவடிக்கைதான். விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்தான் எப்போதும் கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை டாடா மோட்டார்ஸ் முதல் ஆளாக விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து இதர கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.