Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 8 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெல்லியில் டீசல் வாகனங்களுக்கான தடை மரண தண்டனைக்கு சமம்: டொயோட்டா
தலைநகராம் தில்லியில், ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு தலை வலிகளை உருவாக்கும் வகையிலான பல அதிரடி அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 2,000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, அந்தத் திறன் எஞ்சின் கொண்ட வாகனங்களை தில்லியில் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் தன் பங்குக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உத்தரவுகளுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்களின் டீசல் வாகன விற்பனை தில்லியில் சர்ரென சரிந்து மண்ணோடு மண்ணாகியிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து டொயோட்டா நிறுவனம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டீசல் வாகனங்களுக்கு தடை விதித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முற்றிலும் நியாயமானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட உச்சமாக, இந்த தடை உத்தரவு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு ஒப்பானது என்றும் தனது கோபத்தை மனு வாயிலாகக் காட்டியுள்ளது டொயோட்டா நிறுவனம்.
அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளோம்...
பொதுவாக, ஒரு வாகனம் வெளியேற்றும் மாசுவின் அளவுக்கும், அதன் எஞ்சின் திறனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வாகனங்கள் அளவுக்கு அதிகமாக மாசை உமிழும் பட்சத்தில், எஞ்சின்தான் அதற்கு காரணம் என்று கருத வேண்டிய கட்டாயமில்லை என இந்திய மோட்டார் வாகனச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் தடை விதிப்பதோ அல்லது தண்டனை தருவதோ நியாயம். ஆனால், எந்த விதமான விதிமீறல்களும் இல்லாத பட்சத்தில் பொத்தாம் பொதுவாக 2,000 சிசி டீசல் எஞ்சின் வாகனங்களுக்குத் தடை விதித்தது சரியான உத்தரவு அல்ல.
இது, ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் செயல்பாட்டையே முடக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தத் துறையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது என்று அந்த மனுவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது டொயோட்டா நிறுவனம்.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதேந்தர் குமார் முன்பு இந்த மனு, விசாரணைக்கு வந்தது. அதைப் பரிசீலித்த அவர், மனுவின் மீதான அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மொத்தத்தில், தில்லிக்குள் மீண்டும் 2,000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களை உலவ வைக்க பெரு முயற்சி எடுத்து வருகின்றன ஆட்டோ மொபைல் நிறுவனங்கள். சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுத்து விடாப்பிடியாக நிற்கிறது பசுமைத் தீர்ப்பாயம்.
இறுதியில் என்னதான் நடக்கப் போகிறது? என்பதை அறிய கொஞ்ச காலம் காத்திருப்போம்....
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!