Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
30 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துகிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்!
அடுத்த 9 ஆண்டுகளுக்குள் பேட்டரியில் இயங்கக்கூடிய 30 எலக்ட்ரிக் கார்களை புதிதாக அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை வாகனங்களாக (Green Vehicles) வலம் வர உள்ளன. வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறும் வகையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் அந்தக் கார்களை வடிவமைக்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதைத் தவிர, டீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாட்டு முறைகேடு விவகாரத்தில் நற்பெயரை இழந்த அந்நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதன் காரணமாகவே, வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய இந்த புதிய உத்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கையாண்டுள்ளது.
அண்மையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் எஞ்சின்களை மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தியதில், சில முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதாவது, எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் வோல்க்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பல்வேறு சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம்.
மேலும், சர்வதேச அளவில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், வேறு சில காரணங்களால் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.6 சதவீதம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டம் - 2025 நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 30 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவிப்பு வெளியானது.
இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் தலைவர் மேத்தியாஸ் முல்லர், டீசல் எஞ்சின் விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டு வருவதும், அதிலிருந்து புதிய படிப்பினையைக் கற்க வேண்டியதும் அவசியமாகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகனங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். எங்களது வெற்றி தொடர வேண்டும் என விரும்புகிறோம்.
அதைக் கருத்தில் கொண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
2025-ஆம் ஆண்டில் 20 அல்லது 30 லட்சம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையில் 20-இலிருந்து 25 சதவீதமாகும்.
இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருமா ஃபோக்ஸ்வேகன்? பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி