Just In
- 11 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 1.9 லட்சம் டீசல் கார்கள் இந்தியாவில் ரீகால்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் 1.9 லட்சம் டீசல் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது.
ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் விற்கப்பட்ட சுமார் 1.9 லட்சம் டீசல் கார்களை திரும்ப அழைத்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், முன்னதாக எமிஷன் டீசல்கேட் எமிஷன் ஸ்கேண்டல் ('Dieselgate' emissions scandal) எனப்படும் மாசு உமிழ்வு தொடர்பான மென்பொருள் முறைகேட்டில் சிக்கியதை அடுத்து, இந்த ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இது வரையில் இந்தியாவில் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் எதிர் கொள்ளவில்லை. இந்த நிலையில், தாமாக முன் வந்து, இந்த ரீகால் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த டீசல்கேட் முறைகேடு, செப்டம்பர் 2015-ல் அமெரிக்காவில் வெளியாகியது.
உண்மையில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பிராண்ட்கள் மூலம் தயாரிக்கபட்டு இந்தியாவில் விற்பனை செய்யபட்டுள்ள மொத்தம் 3.23 லட்சம் கார்கள் இந்த டீசல்கேட் முறைகேடு மூலம் பாதிக்கபட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக 1.9 லட்சம் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தபட்ட ஒழுங்கு முறை ஆணையங்களிடம் இருந்து அனுமதி கிடைத்த உடன், இந்த ரீகால் நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதல் துவங்கிவிடும்.
டீசல்கேட் முறைகேட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து கார்களும் EA 189 சீரிஸ் மாடலை சேர்ந்ததாகும். இந்த EA 189 சீரிஸ் மாடல், 1.2 இஞ்ஜின், 1.5 இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் இஞ்ஜின் ஆகிய இஞ்ஜின் தேர்வுகள் பொருத்தபட்டவையாக உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் உயர் அதிகாரி கமல் பாசு, பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, "இந்த 2016 பிற்பாதியில் இருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 1.9 லட்சம் டீசல் கார்களை செய்கிறது. முன்னதாக, டீசல்கேட் முறைகேடு தொடர்பாக ஏராளமான கார்கள் அமெரிக்காவில் ரீகால் செய்யப்பட்டு, இந்த பிரச்னை சரி செய்யபட்டது. அமெரிக்காவில் இந்த பிரச்னை சரி செய்யபட்டது போல், இந்தியாவிலும் சரி செய்யும் நோக்கில் தான், ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிலும் ரீகால் செய்யபடுகிறது" என கமல் பாசு தெரிவித்தார்.