Just In
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 4 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாதசாரிகளை காவு வாங்கும் கார்கள்.... வடிவமைப்பை மாற்றுமாறு மத்திய அரசு அதிரடி உத்தரவு
காரில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க பல புதிய தொழில்நுட்பத்திலான சாதனங்கள் வந்துவிட்டன. ஏர் பேக்-களில் கூட பாதுகாப்பு அம்சங்கள் பல அடுக்குகள் மேம்படுத்துவிட்டன.
இது எல்லாமுமே காருக்குள் இருப்பவர்களுக்கு மட்டும்தான். எதிரே வந்து விபத்துக்குள்ளாகுபவர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டைத் (தேர்ட் பார்ட்டி இன்ஷுரன்ஸ்) தவிர வேறு எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லை.
பெரும்பாலும் பாதசாரிகள்தான் இதுபோன்ற விபத்துகளில் சிக்குகின்றனர். அவர்களில் எண்ணற்றோர் உயிரிழப்பது துரதிருஷ்டவசமானது. சாலை விபத்துகளில் சிக்கி 14,000 பாதசாரிகள் உயிரிழந்திருப்பதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஒரு ரிப்போர்டில் பகீர் தகவலை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க, வண்டியின் முகப்பு வடிவமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது பம்பர், பேனட், முகப்பு வளைவுகள் ஆகியவைதான் பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
எனவே, அதைத் தவிர்க்கும் பொருட்டு முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சாதனங்களை இலகுவாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை அமலில் இருந்தாலும், இந்தியாவில் அது பின்பற்றப்படாதது வருத்தத்துக்குரியது.
அவ்வாறு மாற்றங்களைச் செய்தால் மட்டுமே வாகனங்களுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய கார் செயல்பாடுகளை மதிப்பிட அண்மையில் மேற்கொண்ட சோதனையில், இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள் ஒரு மதிப்பெண்ணைக் கூட பெறவில்லையாம்.
இந்த நிலையில்தான் காரின் முகப்புகளை மாற்றியமைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அதற்கான காலக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகமாகும் கார்கள் விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 64 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் இயக்கப்பட்டு செயற்கையாக விபத்துக்குள்ளாக்கி சோதனை மேற்கொள்ளப்படும். அதில் தேர்வாகும் மாடல்களுக்கு மட்டுமே பாதுகாப்புக்கான நற்சான்று வழங்கப்படும் என்று அரசு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சொகுசு வசதிகளுக்கும், சிறப்பம்சங்களுக்கும் கார் நிறுவனங்கள் தரும் முக்கியத்துவத்தை எதிரே வரும் வாகனங்களின் பாதுகாப்புக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை. இனிமேலாவது இந்த விஷயத்தில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!