கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய சாவி முறைக்கு விடைக்கொடுக்கிறது பிஎம்டபுள்யூ...!!
கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய சாவி முறைக்கு விடைக்கொடுக்கிறது பிஎம்டபுள்யூ...!!
சாவிக்கு பதிலாக ஸ்மோர்ட்ஃபோன் செயலியால் கார்களை இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க பிஎம்டபுள்யூ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய பிஎம்டபுள்யூவின் விற்பனை பிரிவு அதிகாரியான இயான் ராபார்ட்சன், கார்களை இயக்குவதற்கான செயலியை உருவாக்குவதற்கான ஆலோசனைகளில் பிஎம்டபுள்யூ ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் பிஎம்டபுள்யூ-விற்கு என்ற தனி செயலியை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் காரை அன்லாக் செய்யவேண்டிய அவசியம் என்பது தனியாக இருக்க வேண்டியதில்லை என்பது பிஎம்டபுள்யூ-வின் கருத்தாக உள்ளது.

காரின் தேவைகளுக்கு என்று தனியாக உருவாக்கப்படும் இந்த பிஎம்டபுள்யூவின் செயலியால், சாவியின் பயன்பாடு இனி பிஎம்டபுள்யூ காரில் இல்லாமல் போகும் என்று கூறுகிறார் இயான் ராபார்ட்சன்.

மேலும் அவர், கார்களின் சாவியை உடனே வைத்திருப்பது என்பது கூடுதல் வேலை. இந்த செயலி வெற்றிக்கரமாக அமைந்தால் அனைத்து கைப்பேசியில் அடங்கும் என்று தெரிவிக்கிறார்.

ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் பிராங்க்பர்ட் கார் கண்காட்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இயான் ராபார்ட்சன்,
வாடிக்கையாளர்கள் சாவியை கொண்டு கார்களை இயக்குவதும், பிறகு எஞ்சினை ஸ்டார்ட் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை என்று தெரிவித்தார்.

விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவில் பிஎம்டபுள்யூ இல்லை. ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் இது நடைமுறைக்கும் என்றும் அவர் கூறினார்.

டெஸ்லா மட்டுமின்றி பெரும்பாலான கார் நிறுவனங்கள் தற்போது தயாரிக்கும் கார்களுக்கு சாவிகளை தரும் நடைமுறையை மாற்றி வருகின்றன.

குறிப்பாக இன்றைய நவீன உலகத்தில் அனைத்தும் ஸ்மார்ட்ஃபோன்களில் நம்பகத்தன்மைக்கு கீழ் சென்றுகொண்டு இருக்கிறது.

இதனால் செயலியை உருவாக்கும் பிஎம்டபுள்யூ-வின் முயற்சி அதன் வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் வரவேற்பு பெறும் என்று கூறுகிறது டெக் உலகம்.


Click it and Unblock the Notifications








