பாரம்பரியமான தனது முத்திரையை திடீரென மாற்றிய பிஎம்டபுள்யூ... காரணம் இதுதான்..!!
பாரம்பரியமான தனது முத்திரையை திடீரென மாற்றிய பிஎம்டபுள்யூ... காரணம் இதுதான்..!!
ஃபிராங்க்பூர்ட் மோட்டார் கண்காட்சியில் பிஎம்டபுள்யூ-வின் புதிய மாடல் கார்களில், அந்நிறுவனத்தின் பாரம்பரியமான முத்திரை மாற்றப்பட்டு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பிஎம்டபுள்யூ 7சிரீஸ், எக்ஸ்7 எஸ்யூவி, 8சிரீஸ் மற்றும் ஐ8 கூபே மற்றும் ரோட்ஸ்டெர் ஆகிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ளது.

இவை அனைத்தையும் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள பிஎம்டபுள்யூ,
தனது பாரம்பரிய முத்திரையில் இடம்பெற்றிருக்கும் நீல நிறத்திற்கு பதிலாக கருப்பு நிறத்தை வெள்ளை உடன் இடம்பெற செய்துள்ளது.

பாரம்பரிமயாக இருக்கும் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையை விடுத்து, ஏன் நீல நிறத்திற்கு பதிலாக கருப்பு நிறத்தை பிஎம்டபுள்யூ தனது லோகோவில் இடம்பெற செய்தது என்பது குழப்பமளித்தது.
Recommended Video


இதற்கு விளக்கமளித்துள்ள பிஎம்டபுள்யூ, இனி அந்நிறுவனம் தயாரிக்கும் சாதரண மாடல்களில் வழக்கம்போல கருப்பு மற்றும் நீல நிற கலவை முத்திரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிஎம்டபுள்யூ-வின் உயர் ரக பிரத்யேக மாடல்களாக அறிவிக்கப்பட்டுள்ள 7 சிரீஸ், எக்ஸ்7 எஸ்யூவி, விரைவில் வெளிவரவுள்ள 8 சிரீஸ் மற்றும் ஐ8 கூபே மற்றும்

ரோட்ஸ்டெர் ஆகிய மாடல்களில் இனி கருப்பு, வெள்ளை நிறக்கலவை தான் லோகோவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிஎம்டபுள்யூவின் இந்த புதிய முத்திரை, கார்பன் ஃபைபர் கொண்டு மிக நுட்பமான முறையுடன் அனைத்து ப்ரீமியர் ரக மாடல்களில் இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிஎம்டபுள்யூ-வின் ப்ரீமியம் ரக கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்,
அதனை தனிப்பட்ட விருப்பங்களுடன் கூடிய சிறப்பை உணர்வார்கள் என பிஎம்டபுள்யூ கருதுகிறது.


Click it and Unblock the Notifications








