Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!
ஃபார்முலா-1 கார் பந்தயம் மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் துளிர் விட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவில், மீண்டும் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த 2011ம் ஆண்டு முதல்முறையாக ஃபார்முலா-1 எனப்படும் உலகின் முதல் தர கார் பந்தயம் இந்தியாவில் நடந்தன. டெல்லி அருகே நொய்டாவில் அமைக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த பந்தயங்கள் விமரிசையாக நடந்தன.
கார் பிரியர்களையும், மோட்டார் பந்தய பிரியர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த பந்தயம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயத்திற்கு விதிக்கப்பட்ட வரிகள் மிக அதிகமாக இருப்பதாக ஃபார்முலா-1 அமைப்பு புகார் தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய அரசிடம் போட்டியை நடத்திய ஜேபி இன்டர்நேஷனல் குழுமம் மேற்கொண்ட பேச்சுகளும், முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதனால், இந்தியாவிலிருந்து ஃபார்முலா-1 கார் பந்தயம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது கார் பந்தய பிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மேலும், ஃபார்முலா-1 பந்தயம் நடத்துவதற்கான தரத்தில், பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டும் ஃபார்முலா-1 போட்டிகள் களை இழந்தது. தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், ஃபார்முலா-1 போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மீண்டும் துளிர்விட்டுள்ளன. ஆம். ஃபார்முலா-1 போட்டி நடத்தும் அமைப்பு அண்மையில் கைமாறியது. ஃபார்முலா-1 அமைப்பை வாங்கியிருக்கும் லிபர்டி மீடியாவின் உரிமையாளர் சேஸ் கரே இப்போட்டியை விரிவுப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
அதன்படி, பல புதிய இடங்களில் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஃபார்முலா-1 போட்டிக்கு இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 21 போட்டிகளை நடத்த லிபர்டி மீடியா திட்டமிட்டுள்ளது. அப்போது, ஃபார்முலா-1 போட்டிகளை நடத்துவதற்கு புதிய நாடுகள் சேர்க்கப்படும். அந்த வகையில், மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 போட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த செய்தி கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!