ரூ.25,000 வரை கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா நிறுவனம் முடிவு... பின்னணி இதுதான்..!!
ரூ.25,000 வரை கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா நிறுவனம் முடிவு... பின்னணி இதுதான்..!!
அடுத்த ஆண்டில் புதிய கார்களை வாங்கும் முடிவில் நீங்கள் உள்ளீர்களா? அப்போது தவறாமல் இந்த பக்கத்தை வரி விடாமல் படியுங்கள்.

மலரும் 2018ம் ஆண்டில் புதிய ஹோண்டா கார்களுக்கான புதிய விலை பட்டியலை வரவேற்க தயாராகுங்கள்.
ஹோண்டாவின் கார்கள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரூ.25,000 வரை விலை ஏற்றத்தை சந்திக்கவுள்ளன.

2018ம் ஆண்டில் கார்களின் உள்ளீட்டு பொருட்களுக்கான விலை 1 முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும் பொருட்டு, ஹோண்டா நிறுவனம் தயாரிப்புகளுக்கான விலையை அதிகரிக்கிறது.

இதன்மூலம் இந்தியாவில் ரூ. 4.66 லட்சம் ஹோண்டா பிரையோ கார் தொடங்கி, ரூ.43.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான அக்கார்டு ஹைஃபிர்டு கார்கள் வரை விலை ஏற்றத்தை சந்திக்கவுள்ளன.

மேலும் இந்தியாவில் ஹோண்டாவிற்கான அதிக விற்பனை திறனை அளித்து வரும் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி மற்றும் சிட்டி செடான் கார்களின் விலையும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video


ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி மாடல் வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு ரூ. 8.51 லட்சம் முதல் ரூ.11.15 லட்சம் வரை விலையில் விற்பனையாகி வருகின்றன.

ஹோண்டா சிட்டி மாடல் வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு, ரூ. 9.95 லட்சம் முதல் ரூ.15.71 லட்சம் வரையில் விற்பனை ஆகி வருகிறது.

ஒன்று முதல் இரண்டு சதவீத விலையேற்றத்தின் காரணமாக டபுள்யூ.ஆர்-வி கார்கள் ரூ.8000 முதல் ரூ.20,000 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ.9000 முதல் ரூ.16000 வரை வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு விலை அதிகரிக்கும்.
*அனுமானத்தின் படியே ஹோண்டா கார்களுக்கான இந்த புதிய விலை வரையறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இசுஸு நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை விலை அதிகரிப்பதாக தெரிவித்தது.
அதேபோல ஸ்கோடாவும் 2 முதல் 3 சதவீதம் வரையில் கார்களுக்கான விலையை ஜனவரி 2018ல் அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications








