Just In
- 55 min ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 1 hr ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 3 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 8 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- Movies சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மின்சார ஆற்றலுக்கு போட்டியாக அடுத்து களமிறங்கும் மரக்கார்கள்... ஆராய்ச்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள்..!
மின்சார ஆற்றலுக்கு போட்டியாக அடுத்து களமிறங்கும் மரக்கார்கள்... ஆராய்ச்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள்..!!
முழுவதும் மரத்திலான கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு கட்டமைப்பு மற்றும் அதற்கு தேவையான உதிரிபாகங்களுக்கு எஃகு தான் முக்கிய உலோகமாக இருந்து வருகிறது.
எஃகு உலோக பயன்பாட்டால், கார்களுக்கு அதிகளவில் எரிவாயு தேவை ஏற்படுகிறது. இதுவே மரத்தினால் உருவாக்கப்பட்டால், எரிவாயு தேவை குறையும் என கூறப்படுகிறது.
Recommended Video
அதிக மாசுபாட்டை உருவாக்கக்கூடிய எஸ்யூவி, கனரக வாகனங்களின் எடையை கூடுமான வரையில் குறைக்கு வேண்டிய அவசியம் உள்ளது என்று வாகன கூறுகள் ஆய்வு நிறுவனம் ஒன்று கருத்து கூறியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த எரிசக்தி துறை சார்ந்த அதிகாரிகள் வாகனத்தின் எடை 10% குறைந்தால், எரிபொருள் தேவையில் அது 8% குறையும் என்று கூறுகின்றனர்.
மரத்தினால் செய்யப்படும் கார்கள், மின்சார கார்களின் பயன்பாட்டை போல திறன்பெற்றவை தான். ஆனால் எரிபொருள் தேவையுடன் மரத்திலான கார்கள் இயங்கும் என்பதே இங்குள்ள வேறுபாடு.
வாகன துறையில் மரத்தின் பயன்பாடு உள்ளே வருவது இதுதான் முதல்முறை. ஏற்கனவே வீடுகள், கப்பல், பாலங்கள் போன்ற உறுதித்தன்மை கொண்ட கட்டுமானங்களை கட்டமைக்க மரத்தின் தேவை பயன்படுத்தப்படுகிறது.
மரத்தினால் ஆன கார்களை தயாரிக்கும் முடிவில், அதற்கான மரக்கூழ் ஒன்றை ஜப்பானின் கியோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மரக்கூழ் என்பது எஃகு உலோகத்தின் உறுதிப்பாடு மற்றும் பயன்பாட்டை வாகனங்களுக்கு ஏற்றவகையில் தர வல்லது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிப்புற காட்சிக்கு உருவாக்கப்படும் டிஸ்பிளேக்குள் முதல் பேனா மை வரை செல்லுலோஸ், நானோ நாரிழைகள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற தனிமங்களை கொண்டு வாகனங்கள் மற்றும் அதற்கான உதிரிபாகங்களை கட்டுமானப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தயாரிக்கப்படும் மரக்கூழ் கொண்டு காரினுடைய கதவுகள், மோதலை தவிர்க்கும் அமைப்பு, காரின் மேற்கூரை போன்ற பகுதிகள் உருவாக்கப்படும்.
இவற்றை தவிர ஜப்பான் பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் டாட்சுனோ கனெகோ, உயர் ரக பிளாஸ்டிக்கால் வாகனங்களுக்கான எஞ்சினை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்.
அதிக நிலை வெப்பத்தை தாங்கக்கூடிய அளவில் வாகன எஞ்சின்களை உருவாக்க பேராசிரியர் கனெகோ, கார் பகுதி மற்றும் மின்னணு பாகங்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஜப்பான் விஞ்ஞானிகள் இந்த முயற்சிக்கு உலக ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பெரியளவில் ஆதரவு தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, 2025ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பங்கு வாகன விற்பனையை மின்சார ஆற்றலுக்கு மாற்றி முயற்சித்து வருகிறது.
பிஎம்டபுள்யூ ,கார்பன் ஃபைபரை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் பிளாஸ்டிக் கூரைக்கொண்ட ஒரு புதிய மெலிதான எம்5 செடான் காரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
மேலும் டொயோட்டா நிறுவனமும் அதிக விற்பனை திறனை பெற்ற சில மாடல்களில் பிஎம்டபுள்யூ கார்பன் ஃபைபரை முக்கிய உலோகமாக பயன்படுத்தியது.
தொடர்ந்து சீனா மற்றும் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஈடுபட்டு வர, மரக்கூழினால் தயாரிக்கப்படும் கார்களுக்கு பெரிய சந்தை விரைவிலேயே உருவாகலாம் என்ற நிலை தற்போது எழுந்துள்ளது.
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!