Just In
- 34 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கும் மஹிந்திரா!
மஹிந்திரா நிறுவனம் புதிய சொகுசு எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இணையான ரகத்தில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா சில ஆண்டுகளுக்கு முன் களமிறக்கியது. ஆனால், சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து, சாங்யாங் பிராண்டை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ள மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது.
புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி Y400 என்ற குறியீட்டுப் பெயரில் சாங்யாங் நிறுவனம் உருவாக்கி வருகிறது. சாங்யாங் LIV-2 கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
இதே எஸ்யூவியை தனது சொந்த பிராண்டில் ரீபேட்ஜ் செய்து வெளியிட மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இந்த எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்தே பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால், போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் இந்த எஸ்யூவியை களமிறக்க மஹிந்திராவுக்கு வாய்ப்பு கிட்டும். தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விட மேலான ரகத்தில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும்.
புதிய மஹிந்திரா பிரிமியம் எஸ்யூவி மாடலானது 7 சீட்டர் மாடலாக வெளிவர இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட புதிய மஹிந்திரா எஸ்யூவியானது 120மிமீ கூடுதல் வீல்பேஸ் கொண்டதாக இருக்கும். எனவே, உட்புறத்தில் மிக மிக சவுகரியமான இடவசதியை மூன்று வரிசை இருக்கைகளிலும் எதிர்பார்க்கலாம்.
புதிய மஹிந்திரா எஸ்யூவியானது 4,850மிமீ நீளமும், 1,960மிமீ அகலமும், 1,800மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். லேடர் ஃப்ரேம் சேஸீயில் இந்த புதிய எஸ்யூவி கட்டமைக்கப்பட்டு இருக்கும்.
புதிய மஹிந்திரா பிரிமியம் எஸ்யூவியில் 184 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இடம்பெற்று இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் வரும் என தெரிகிறது. ரியர் வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புறத்தில் மிக நவீன கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் வருகிறது. 9.2 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.
இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இருக்கும்.
இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.20 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.