மிகப்பெரிய தீபாவளி கார்னிவல்லை அறிவித்த நிஸான் மற்றும் டட்சன்..!!
மிகப்பெரிய தீபாவளி கார்னிவல்லை அறிவித்த நிஸான் மற்றும் டட்சன்..!!
இந்தியாவில் நிஸான் மற்றும் டட்சன் நிறுவனங்கள் 'மிகப்பெரிய தீபாவளி கார்னிவல்' என்ற பெயரில் பண்டிகை கால விற்பனையை விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கான விற்பனை திறனை அதிகரித்தும் கொள்ளும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் நன்மைகள் இந்த கார்னிவல்லில் வழங்கப்படவுள்ளது.

நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கார்னிவல்லில், இலவச காப்பீடு, எக்ஸ்சேஞ்ச் போனஸ், மிகக் குறைந்த நிதி விகிதம் கொண்டு நிஸான் மற்றும் டட்சன் தயாரிப்புகளை வாங்குதல் உள்ளிட்ட பல அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Recommended Video


வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த கார்னிவல் மொத்தம் 100 மணிநேரங்கள் மட்டுமே இயங்கும்.

நிஸான் மற்றும் டட்சன் தயாரிப்புகளுக்கு மட்டுமே கார்னிவல் விற்பனைக்காக கூறப்பட்டுள்ள அம்சங்கள் செல்லுபடியாகும்.

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அதிகாரி ஜிரோம் சாய்கோட் பேசும்போது,
"வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தான் நிஸான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கான வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர்"

"தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தீபாவளி கார்னிவல், புதிய வாடிக்கையாளர்களிடம் கார் வாங்கும் திறனை அதிகரிக்கும் என நம்புகிறோம்" என்று கூறினார் ஜிரோம் சாய்கோட்.

நிஸான் டெரனோ மாடலுக்காக ரூ.50,000 செலுத்துபவர்களுக்கு நிஸான் மற்றும் டட்சன் கார்னிவல், இலவச காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

டட்சன் கோ, கோ பிளஸ், ரெடிகோ கோ (800சிசி) மற்றும் ரெடிகோ 1.0 L (100சிசி) மாடல்களுக்கு ரூ.15,000 செலுத்தினால் இலவச காப்பீடு, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பல ஆஃபர்களை பெறலாம்.

பண்டிகை காலங்களில் நிஸான், டட்சன் கார்னிவல் போல திருப்தியளிக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது மிகவும் கடினம்.

அதனால் உங்களுக்கு நிஸான், டட்சன் மாடல்களை வாங்குவதில் ஒரு கவனம் இருந்தால், இந்த கார்னிவல்லை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








