Just In
- 32 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தாகத்தில் தவிக்கும் தமிழகத்திற்கு 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து தந்த நிஸான் இந்தியா..!!
இந்தியாவே தாகத்தில் தவிக்க சுமார் 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து, பொறுப்புள்ள கார் நிறுவனமாக உள்ளது நிஸான்.
இந்தியாவின் நிஸான் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கான விவரங்களை கீழே படியுங்கள்.
கார் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் பல, மின்சார கார் மற்றும் அவற்றுக்கு நீண்ட ஆயுள் தரும் பேட்டரிகள் போன்றவற்றை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுபோன்ற முன்னோடி சிந்தனைகளுக்கு இந்திய நிஸான் நிறுவனம் எப்போதோ விதிட்டு விட்டது. அது தான் நுரைகள் மூலம் கார்களை கழுவும் தொழில்நுட்பம்.
இதில் என்ன புதிது என்று நீங்கள் நினைக்கலாம். 2014ம் ஆண்டில் இந்த வழிமுறையை நிஸான் அறிமுகப்படுத்திய போது பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் அப்படி தான் நினைத்தன.
ஆனால் இந்த புதிய அணுகுமுறை தான் இன்று இந்தியாவில் இயங்கும் நிஸான் நிறுவனத்திற்கு உலக அடையாளத்தை வழங்கியுள்ளது.
சர்வீஸ் மையங்களுக்கு கார்கள் செல்லும் போது, அவற்றை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்ய கிட்டத்தட்ட 160 லிட்டர் தண்ணீர் செலவாகும்.
ஆனால் நிஸானின் நுரைகள் மூலம் கார் கழுவும் முறையால் ஒரு காருக்கு சுமார் 90 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவை. இதன் மூலம் 45 சதவீத அளவில் கார் கழுவும் போது தண்ணீர் மிச்சமாகிறது.
நுரைகள் மூலம் கார் கழுவும் இந்த வழிமுறை அறிமுகமான பிறகு, 2014 தொடங்கி தற்போது வரை நிஸான் நிறுவனம், ஒரு நாளில் 25,000 இந்தியக் குடும்பங்களுக்கு தேவைப்படும் தண்ணீரை சேமித்துக்காட்டி அசத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக பார்க்கப்படும் இந்த தொழில்நுட்பத்தை குறித்து பேசிய இந்திய நிஸான் நிறுவனத்தின் துணைத்தலைவரான சஞ்சீவ் அகர்வால்,
"வாடிக்கையாளர்களின் மனம் கருதி எப்போதும் புதுமை நாடுவது தான் நிஸான் இந்தியாவின் விருப்பம். அவற்றுடன் சுற்றுச்சூழல் குறித்த எண்ணமும் எங்களுக்கு இருப்பதை இதன் மூலம் செய்துகாட்டியுள்ளோம்" என்று கூறுகிறார்
இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நீரின்றி தற்போது தாகத்தில் தவித்து வருகின்றன. இதில் தமிழகம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கும் நிஸான் நிறுவனம், தண்ணீரை சேமிக்க உருவாக்கியுள்ள இந்த புதிய வழிமுறை நிச்சயம் பாராட்டத்தக்கது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!