Just In
- 42 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சைபர் திருடர்களால் ’ஹேக்’ செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவனம்: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்
ரெனால்ட் நிறுவனம் சைபர் திருடர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த பின்னணி காரணங்கள் இங்கே விரிவாக
ஃபிரான்ஸ் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் சென்னை உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
ரெனால்ட் தனது உற்பத்தியை நிறுத்த பெட்ரோல் பஞ்சமோ, இரும்பு தட்டுபாடோ, ஆக்கத்திறன் குறைப்பாடோ அல்லது பொருளாதார மந்தைநிலையோ காரணமல்ல.
உலகம் முழுவதும் பரவி வரும் சைபர் தாக்குதலால் (சில செய்தி ஊடகங்கள் அந்த தாக்குதலை வானா கிரை என்று குறிப்பிடுகின்றன) 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய பயணாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சைபர் தாக்குதல் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான ரொனால்ட் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரெனால்ட் நிறுவனத்திற்கான ஆலைகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக தனது உற்பத்திய ரெனால்ட் நிறுத்தி உள்ளது.
மேலும் இதே தாக்குதல் ஃபிரான்ஸ் உட்பட சில நாடுகளில் நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. சென்னை ஒரகடம் அருகில் இயங்கி வரும் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கூட்டு ஆலையிலும் உற்பத்தி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் குறித்து பாரீஸ் நகரில் பேசிய ரெனால்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தொழில்நுட்பவியலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படாமல் தவிர்க்கவே, சைபர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நாடுகளில் ரெனால்ட் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இதற்காக தகுந்த ஆதாரங்களுடன் ஃபிரான்ஸ் நாட்டு காவல்துறையை ரெனால்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அனுகியுள்ளதாகவும்,
அதற்கான நடவடிக்கைகளை ஃபிரான்ஸ் காவல்துறை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும், ரெனால்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பாரீஸில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை ஆலை ஃபிரான்ஸ் நாட்டில் வடமேற்கு பகுதியான சண்டோவில்லே பகுதியில் அமைந்துள்ளது. அங்கும் சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், அதனால் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் ரெனால்ட் செய்தி தொடர்பாளர் கூறினார்.
ஆனால் பல்வேறு நாடுகளில் உள்ள ரெனலாட் ஆலைகளில் எங்கெங்கெல்லாம் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பதை பற்றிக்கூற அவர் மறுத்துவிட்டார்.
உலகளவில் சுமார் நூறு நாடுகளில் உள்ள ரெனலாட் நிறுவனத்தின் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உலகளவில் ரெனால்ட் நிறுவனத்தில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிப்படைந்துள்ளதாக ஃபிரான்ஸ் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரெனால்டுக்கு போட்டி நிறுவனமான உள்ள பி.எஸ்.எ-வில் இதுபோன்ற தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை என்று செய்திதொடர்பாளர் பாரீஸில் தெரிவித்துள்ளார்.
ரெனலாட்-நிசான் நிறுவனங்களில் கூட்டு ஆலை சென்னை ஒரகடம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு ரெனலாட் சந்தேகத்தின் பெயரில் தான் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
ஆந்திராவில் சமீபத்தில் காவல்துறை இணையத்தில் மால்வேர் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இதை கருத்தில்கொண்டு இந்தியாவில் நிசான் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க