Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.
பெரும் ஆவலை தூண்டியிருக்கும் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற பல ஜாம்பவான் மாடல்கள் ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் போட்டியாக புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியும் விரைவில் களமிறங்க இருக்கிறது.
அடுத்த மாதம் 4ந் தேதி புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடிவமைப்பு, வசதிகளில் மிகச் சிறந்த தேர்வாக வரும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
Recommended Video
ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா கார்கள் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா கார்களின் பாரம்பரியமான பட்டர் ஃப்ளை க்ரில் அமைப்புடன் மிக நேர்த்தியான டிசைன் செய்யப்பட்ட மாடலாக வருகிறது புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. காரின் ஒவ்வொரு பகுதியும் மிகச் சிறப்பான வடிவமைப்பை பெற்றிருப்பது இதன் முக்கிய பலமாக இருக்கிறது.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி முதலில் டீசல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வழங்கும். பெட்ரோல் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த எஸ்யூவியில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் வருகிறது.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் அகன்ற தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.
ஸ்கோடா ஆக்டேவியா கார் போன்றே இந்த புதிய எஸ்யூவியிலும் ஹேண்ட்ஸ்ஃப்ரீ பார்க்கிங் வசதி கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, நெருக்கடியான இடங்களில் கார் தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் வசதி மிகச் சிறப்பானதாக இருக்கும்.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரூ.27 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!