2018ல் கோடியாக் விஆர்எஸ் எஸ்யூவி காரை வெளியிடும் முடிவில் ஸ்கோடா..!!
2018ல் கோடியாக் விஆர்எஸ் எஸ்யூவி காரை வெளியிடும் முடிவில் ஸ்கோடா..!!
ஸ்கோடா வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய ஸ்போர்டியர் விஆர்எஸ் வெர்ஷன் கோடியாக் எஸ்.யூ.வி காரை 2018ல் அறிமுகம் செய்து வைக்கிறது.

மிக எதிர்பார்ப்பை இந்தியளவில் பெற்றுள்ள இந்த கார் வேரியண்டுகளுக்கு தகுந்தபடி 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்டு தயாராகி வருகிறது.

இந்த கார் குறித்த எந்தவிதமான தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களையும் இதுவரை ஸ்கோடா வெளியிடவில்லை.

ஆனால் கோடியாக் காரில் இருக்கக்கூடிய டீசல் மாடல் கார் மிகவும் திறன் பெற்ற டார்க் கொண்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video


மேலும் இதனுடன் பெட்ரோல் வெர்ஷன் காரும் வெளிவருகிறது. ஆனால் உற்பத்தியில் கோடியாக் மாடலில் டீசல் வேரியண்டுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் தரப்படவுள்ளது.

கோடியாக் விஆர்எஸ் எஸ்.யூ.வி கார் முழுவதும் 4-வீல்-டிரைவிங் திறன் கீழ் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாக ஸ்கோடா கூறியுள்ளது.

ஸ்டேன்டர்டு மாடலை விட மிகவும் ஆக்கத்திறன் மற்றும் தொழில்நுட்ப வடிவில் முன்னேற்றப்பட்ட மாடலாக இந்த கோடியாக் விஆர்எஸ் கார் தயாரிக்கப்படுகிறது.

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கோடியாக் காரின் ஸ்போர்டியர் மாடல் கார் மிகவும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனில் விஆர்எஸ் மாடல் கார் ஆக்டேவியே விற்பனையில் 20 சதவீத பங்கை வழங்கும் எனவும் அவை அனைத்தும் டீசல் மாடலாக இருக்கும் எனவும் ஸ்கோடா கூறுகிறது.

மேலும் கூபே வேரியண்டுடன் கூடிய கோடியாக் எஸ்யூவி காரை சீனாவில் வெளியிட ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

சீனாவில் விற்பனை செய்யப்பட உள்ள கோடியாக் மாடல் கார்கள் அங்கேயே தயாரிக்கப்படும். மேலும் இதே கூபே கோடியாக் மாடல் கார் ஐரோப்பா நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகமாகும்.

கடந்த 1ம் தேதி ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ் மாடல் காரை இந்தியாவில் வெளியிட்டது. மேலும் ஸ்டான்டர்டு வேரியண்ட் கோடியாக் கார் இந்தியாவில் 2017 இறுதியில் வெளிவருகிறது.

எஸ்.யூ.வி-ற்கான சந்தை இந்தியாவில் வளம் பெற்று வருவதால் ஆக்டேவியா காரை ஸ்போர்டியர் தோற்றத்திற்கு மாற்றும் முயற்சியையும் ஸ்கோடா ஆராய்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








