Just In
- 1 hr ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance RCB கப் அடிக்காவிட்டாலும், இந்த விஷயத்தில் கில்லி.. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் செய்த ராயல் சம்பவம்!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
டியாகோ கட்டுமான தரத்தில் சமசரசம் செய்து கொள்ளாத டாடா... 4 உயிர்கள் தப்பியது!!
டாடா டியாகோ கார் பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
டாடா டியாகோ கார் விபத்துக்குள்ளாவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கார் விபத்தில் சிக்கினாலும் பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வருவதே, இந்த செய்திகள் அதிக முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாகி உள்ளன.
இந்த நிலையில், மீண்டும் ஒரு டாடா டியாகோ கார் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. அண்மையில் கேரள மாநிலம், கொல்லம் நகர் அருகே சென்று கொண்டிருந்த டாடா டியாகோ கார் ஒன்று திடீரென சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்தது.
சாலையின் குறுக்கே திடீரென வந்த பாதசாரி மீது மோதாமல் இருப்பதற்காக, காரை திருப்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக, அதன் உரிமையாளர் எமக்கு அளித்த தொலைபேசி தகவலில் தெரிவித்தார்.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காரில் பயணித்த நான்கு பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், லேசான காயங்களுடன் விபத்துக்குள்ளான காரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
மேலும், கார் பல்டியடித்து கவிழ்ந்தாலும், காரின் கட்டுமானம் திடமாக இருந்ததும் காரில் இருந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. இல்லையெனில், காரின் கூரை உள்ளிட்ட பகுதிகள் நசுங்கிவிடும்.
ஆனால், டாடாவின் புதிய கார்கள் சிறந்த கட்டுமான திடத்துடன் வருவதால், இதுபோன்ற விபத்துக்களில் பயணிகள் தப்புவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
Trending On DriveSpark Tamil:
Recommended Video
அதிக மைலேஜ் தரும் வகையில் கட்டமைப்பதற்காக, கார்களின் எடை வெகுவாக குறைக்கும் நுட்பத்தை பல கார் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
ஆனால், டாடா நிறுவனம் காரின் கட்டுமானம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை கருதி, எடை விஷயத்தில் சமசரம் செய்து கொள்வதில்லை. இதனால், இதுபோன்ற விபத்துக்களில் டாடா டியாகோ, ஹெக்ஸா உள்ளிட்ட கார்கள் பயணிகளின் உயிர்களுக்கு சற்று கூடுதல் உத்தரவாதம் அளிப்பதாக கருதலாம்.
கார் சிறப்பான கட்டுமானத் தரத்தை பெற்றிருந்தாலும், காரில் பயணித்த நான்கு பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததும், அவர்கள் உயிர் தப்பியதற்கு முக்கிய காரணம். இந்த சம்பவத்தின் மூலமாக சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தையும் கார் ஓட்டுனர்களும், பயணிகளும் உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
சிறந்த அடிப்படை வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்படுவதால், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மாடலாக இருக்கிறது. இதனால், சராசரியாக மாதத்திற்கு 7,000 கார்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனை செல்கிறது.
Via- Rushlane
Trending On DriveSpark Tamil:
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!