இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஜோராக சாலைகளில் வலம் வரும் வைரல் வீடியோ..!!
இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஜோராக சாலைகளில் வலம் வரும் வைரல் வீடியோ..!!
இந்தியாவின் முதல் டெஸ்லா காரை மும்பையை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் வாங்கினார். 'மாடல் எக்ஸ்' என்ற பெயரிலான அந்த கார் எஸ்யூவி மாடல்.

முழுக்க முழுக்க மின்சார ஆற்றல் கொண்ட மாடல் எக்ஸ் கார் தற்போது மும்பையின் சாலைகளை அலங்கரிக்க தொடங்கியுள்ளது.

செல்லும் இடங்களில் எல்லாம் பலரையும் ஆச்சர்யமடைய செய்யும் அந்த காரின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

எஸ்ஸா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரசாந்த் ரூயா என்பவர் தான் இந்தியாவிற்கான முதல் டெஸ்லா காரை வாங்கியுள்ளார்.

எஸ்யூவி ரகத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட டெஸ்லா மாடல் எக்ஸ் கார், டீப் ப்ளூ மெட்டாலிக் நிறத்தில் காட்சியளிக்கிறது.
சர்வதேச சந்தைகளிலும் இந்த கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக டெஸ்லா சமீபத்தில் தெரிவித்துள்ளது.
ஏழு பேர் அமரும் வகையில் தயாராகியுள்ள டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார எஸ்யூவி கார், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 83.46 லட்சம் விலைபெறும்.

வெளிநாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரும் செலவு, ஏற்றுமதி வரி உட்பட டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி மின்சார கார் ரூ. 2 கோடி வரை விலைபெறும்.

ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான செயல்திறனுடன் டெஸ்லா நிறுவனம் இந்த காரை தயாரித்துள்ளது. இந்த காரின் முன் மற்றும் பின் எக்சைல் பகுதிகளில் இரண்டு மின்சார மோட்டார்கள் உள்ளன.

முன்பகுதியில் உள்ள மின்சார மோட்டார் மூலம் 255 பிஎச்பி பவர் வரை கிடைக்கும், பின்பகுதி மோட்டார் மூலம் 496 பிஎச்பி பவர் கிடைக்கும்.

இதன்மூலம் டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி கார் ஒட்டுமொத்த டார்க் திறன் 967 என்.எம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 4.8 நொடிகளில் எட்ட முடியும் இந்த காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ.
Recommended Video


மாடல் எக்ஸ் மாடலில் வேறொரு வேரியண்டையும் டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ளது. பி90டி என்ற அந்த மாடல் 3.8 விநாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை அடையும்.

இதே பி90டி மாடல் கார் லூடிக்ரோஸ் என்ற பெயரிலும் தயாராகிறது. எஸ்யூவி மாடலான அந்த கார் 3.2 விநாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும்.

டெஸ்லாவின் மாடல் எக்ஸ் காரில் ஆட்டோ பைலட் என்ற பெயரில் செமி-அட்டோனொமஸ் என்ற டிரைவிங் சிஸ்டம் உள்ளது. இது காரை தானாகவே இயங்கும் திறன் பெற்றது.

இதுதவிர அனைத்து தரப்பினரும் வாங்கக்கூடிய இந்தியாவிற்கு ஏற்ற ’மாடல் 3’ என்ற பெயரில் ஒரு காரை டெஸ்லா தயாரித்து வருகிறது.
ஆனால் அதற்கான திட்டம் மற்றும் வெளியீடு தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன துறையை மின்சார ஆற்றலை நோக்கி திருப்ப மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
அந்த நோக்கத்தை எட்ட டெஸ்லாவின் தயாரிப்புகள் பெரிய உதவியாக இருக்கும் என்பதே ஆட்டோதுறையினரின் கருத்து.

இந்தியாவில் மின்சார ஆற்றலுக்கு வாகனங்களை மாற்றுவது பெரிய காரியமில்லை. அதற்கான கட்டமைப்புகள் உருவாக்குவது தான் பெரிய சவாலான காரியம்.

அதற்கான முயற்சிகளை இந்திய அரசு முன்னெடுத்தால் மின்சார கார் பயன்பாடு பெரிய வெற்றி அடையும்.
டெஸ்லாவின் வருகைக்கு பின்னால் இந்த சாதனை சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Trending DriveSpark YouTube Videos
Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here


Click it and Unblock the Notifications








