ஜிஎஸ்டி-க்கு முன்... ஜிஎஸ்டி-க்கு பின்... டொயோட்டா செய்யும் கேமிங் பிளான்..!!
ஜிஎஸ்டி-க்கு முன்... ஜிஎஸ்டி-க்கு பின்... டொயோட்டா செய்யும் கேமிங் பிளான்..!!
டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தாண்டின் ஜுன் வரையில் 1,973 அளவில் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜிஎஸ்டிக்கு பிறகு இந்த நிலை இருக்காது என்று ஆட்டோமொபைல் உலகம் கூறுகிறது.

ஜிஎஸ்டி வரியில் எஸ்.யூவி போன்ற பெரிய ரக வாகனங்கள் 28 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன. மேலும் கூடுதலாக செஸ் வரி 15 சதவீதம் பெறுகின்றன.

ஜிஎஸ்டி-க்கு முன்னரான வரி மதிப்பில் வாகனங்கள் அனைத்தும் 55 சதவீத அளவில் வரியை பெறும். இனி இதில் இருந்து 12 சதவீதம் குறைவாகவே வரி செலுத்தம் நிலை உருவாகியுள்ளது.

ஜிஎஸ்டியில் டொயோட்டோவின் இன்னவோ கிறிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற எஸ்.யூ.வி கார்கள் 28 சதவீத வரியை பெறும்.

ஜிஎஸ்டியில் டொயோட்டோவின் இன்னவோ கிறிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற எஸ்.யூ.வி கார்கள் 28 சதவீத வரியை பெறும்.

தற்போது ஜிஎஸ்டி இன்று முதல் அமலாக்கப்பட்டுள்ளதால் எஸ்.யூ.வி ரக கார்களை வாங்கும் திறன் இந்தியாவில் அதிகரிக்கும்.

இதன் காரணமாகவே டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் மற்றும் கிறிஸ்டா கார்கள் ஜூன் வரையில் பெரியளவில் விற்பனை திறனை பெறாமல் இருந்தது.

இன்று முதல் ஜி.எஸ்.டி நடைமுறைக்கும் வருவதால், எஸ்.யூ.வி கார்களின் விற்பனையில் கிறிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய இந்திய டொயோட்டா நிறுவனத்தின் சந்தை மற்றும் விற்பனை பிரிவு தலைவர் என்.ராஜா,
"இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பயணிகள் காரை வாங்குவதில், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதற்கு பிறகு நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கான சூழ்நிலை இன்று முதல் உருவாகலாம்" என்று கூறியுள்ளார்.

இதை உணர்ந்துக்கொண்டுள்ள டொயோட்டா, தனது டீலர்களை முதல் வாடிக்கையாளர்களாக நினைத்து, டிமாண்டிற்கு ஏற்றவாறு எஸ்.யூ.வி கார்களை உருவாக்கி விநியோகிக்க முடிவு செய்துள்ளது.

இதைக்குறித்து கூறிய என்.ராஜா, தற்போது ஸ்டாக்கில் உள்ள கார்களை விற்பனை செய்வதில் டீலர்கள் அதிக கவனத்துடன் உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்டா மற்றும் ஃபார்ச்சுனர் கார்களுக்கு பெரியளவில் சந்தை உள்ளதால், ஸ்டாக்கில் உள்ள கார்கள் விற்பனை ஆவதில் சிக்கல் இருக்காது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை கருத்தில் கொண்டு பல்வேறு விற்பனை திறனை மனதில் வைத்துள்ளது டொயோட்டா.

இருந்தாலும் டொயோட்டா பொருட்களுக்கு இந்தியாவில் இருக்கும் நம்பகத்தன்மைக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் அதை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஜிஎஸ்டி காரணமாக வாகன விற்பனை அதிகரிக்கும் என்பது முன்பே தெரிந்த ஒன்று தான். ஆனால் தொடர்ந்து உருவாகும் தேவை காரணமாக, இன்னும் கார்களின் விலை குறையலாம் என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








