Just In
- 31 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 56 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் திரும்பப்பெறப்படும் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் கார்கள்!
டொயோட்டாவின் கொரோலா ஆல்டிஸ் கார்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டொயோட்டா, அதன் கொரோலா ஆல்டிஸ் மாடல் கார்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா உட்பட உலகம் முழுவதும் 2.9 மில்லியன் ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெற உள்ளது டொயோட்டா நிறுவனம்.
கொரோலா ஆல்டிஸ் கார்களில் உள்ள ஏர்பேக்குகளில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த திரும்பப்பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் டகாடா நிறுவனத்தால் இந்த ஏர் பேக்குகள் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந்தியா, ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய ஓசியானா பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 2.9 மில்லியன் கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன.
2010 - 2012 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்த ஆல்டிஸ் கார்கள் தயாரிக்கப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ஓசியானா பகுதிகளில் 1.16 லட்சம், ஜப்பானில் 7.5 லட்சம், இந்தியாவில் 23,000 ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்படும் என டொயோட்டா அறிவித்துள்ளது.
டகாடா நிறுவனம் தயாரித்த ஏர் பேக்குகளில் பயன்படுத்தப்படும் உலர்த்தும் கலவை இல்லாத அம்மோனியா நைட்ரேட் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் தயாரித்து அளித்த சந்தையில் இருந்த 100 மில்லியன் ஏர்பேக்குகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
முன்னதாக 2013ஆம் ஆண்டில் இதேபோல டகாடா நிறுவன ஏர்பேக்குகளால் தொடர்ச்சியான உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க ஆட்டொமொபைல் வரலாற்றில் அதிகபட்சமாக 42 மில்லியன் கார்கள் திரும்பப்பெறப்பட்டது நினைவுகூறத்தக்கது.
டொயோட்டாவின் இந்திய வர்த்தக நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, டீலர்கள் மூலமாக இலவசமாக இப்பிரச்சனை சரிச்செய்துதரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 கொரோலா ஆல்டிஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் உள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய கொரோலா ஆல்டிஸ் கார், 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15.87 லட்சம் முதல் ரூ.19.91 லட்சம் வரையில் கிடைக்கிறது. (எக்ஸ் - ஷோரூம், டெல்லி)
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!