மெர்சிடிஸை தொடர்ந்து பிஎம்டபுள்யூ-வை துரத்தும் மாசு உமிழ்வு மோசடி..!!
மெர்சிடிஸை தொடர்ந்து பிஎம்டபுள்யூ-வை துரத்தும் மாசு உமிழ்வு மோசடி..!!
சொகுசு கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் பிஎம்டபுள்யூ நிறுவனம், தற்போது மோசடி புகாரில் சிக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ நிறுவனம் விற்பனைக்கு அனுப்பிய 11700 கார்களை திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் தயாரித்த 7 சிரீஸ், 5 சிரீஸ் கார்களில் மென்பொருள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், அதனால் அவற்றை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தவறான ப்ரோகிராம் காரணமாக கார்களிலுள்ள மென்பொருள் சரிவரி இயங்கவில்லை. இதன்காரணமாக கார்களின் அதிநவீன 6 சிலிண்டர் கொண்ட எஞ்சின்களின் செயல்பாட்டில் பிரச்சனை இருந்து வந்தது.

இதன்காரணமாக அதிகரித்த புகாரால் தற்போது பிஎம்டபுள்யூ நிறுவனம் 2012 முதல் 2017 வரை விற்பனை செய்யப்பட்ட ‘ஃபிளாக்ஷிப்- 7 சீரிஸ்' மற்றும் ‘மிட்ரேஞ்ச்- 5’ சீரிஸ் ஆகிய 2 மாடல் கார்களை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


அதிநவீன செயல்பாடுகள் மட்டும் கட்டமைப்புகளை கொண்ட இந்த கார்களில், அதிக செயல்திறன் பெற்ற எஞ்சின்களையும் மற்றும் மூன்று டார்போ சார்ஜர்களும் வழங்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே ஃபோக்ஸ்வேகனின் துணை நிறுவனங்களாக உள்ள ஆடி, லம்போர்கினி நிறுவனங்களின் டீசல் மாடல் கார்களில் மாசு உமிழ்வு மோசடி புகார்கள் எழுந்து வந்தன.

அதை முற்றிலுமாக பிஎம்டபுள்யூ மறுத்து வந்த நிலையில், கேடு விளைவிக்கும் புகையை மறைக்க உதவியாக மென்பொருள் தயாரித்ததாக பிஎம்டபுள்யூ மீது அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்னதாக மாசு உமிழ்வு மோசடியில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு 3170 கோடி டாலர்களை அமெரிக்க அரசு அதற்கு அபராதம் வித்ததது.

இந்த தொகையில் 2000 கோடி டாலர்களை ஃபோக்ஸ்வேகன் அமெரிக்க அரசிற்கு செலுத்தியுள்ளது. மீதி தொகையை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகிறது.

இந்நிலையில் ஃபோக்ஸ்வேகனின் மற்றொரு துணை நிறுவனமாக உள்ள பிஎம்டபுள்யூ மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








