ஒத்த பைசா இல்லாமல் புதிய டெயோட்டா யாரிஸ் காரை வாங்கும் புதிய திட்டம்!!
அரசு பணியாளர்கள் முன்பணம் செலுத்தாமல் டொயோட்டா யாரிஸ் காரை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக, எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை கடன் வழங்கும் வசதியை நிதி நிறுவனங்கள
அரசு பணியாளர்கள் முன்பணம் செலுத்தாமல் டொயோட்டா யாரிஸ் காரை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு திட்டம் குறித்து முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அதிக வசதிகளுடன் வந்த டொயோட்டா யாரிஸ் கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பவர் அட்ஜெஸ்ட் டிரைவர் சீட், 7 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ரூஃப் மவுண்ட் ஏர் வென்ட்டுகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் என அசத்தலான அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற ஜாம்பவான் மாடல்களை எதிர்கொள்ளும் விதமாக, புதிய திட்டத்தை டொயோட்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அரசு பணியாளர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்காக, 'Drive the Nation' என்ற சிறப்பு திட்டத்தை டொயோட்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முன்பணம் செலுத்தாமல் கார் வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பொதுவாக, எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை கடன் வழங்கும் வசதியை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்குகின்றன. ஆனால், இந்த சிறப்பு திட்டத்தின்படி, முன்பணம் இல்லாமல் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் அளவுக்கு கடன் பெறும் வசதியை டொயோட்டா அறிமுகம் செய்தது.

மேலும், மாதத் தவணையும் குறைவாக இருக்கும் விதத்தில் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே, இந்த திட்டத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட கார்கள் உள்ளன.

இந்த நிலையில், தற்போது டொயோட்டா யாரிஸ் காருக்கும் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் வரை அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடன் பெறும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, இந்த திட்டத்தின் கீழ், சிறப்பு காப்பீட்டு திட்டம், கூடுதல் வாரண்டி காலம் மற்றும் ஒரிஜினல் ஆக்சஸெரீகள் மீது சலுகைகள் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து டொயோட்டா டீலர்களிலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கா விசேஷ விற்பனை பிரதிநிதிகளும் செயல்படுவார்கள். இவர்கள் டொயோட்டா யாரிஸ் கார் வாங்க வரும் அரசு ஊழியர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்கள் கார் வாங்கும் நடைமுறையை எளிமையாக செய்து கொடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








