Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ்: புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்; படங்களுடன் தகவல்..!!
2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ்: புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்; படங்களுடன் தகவல்..!!
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய அமேஸ் செடான் காரை அறிமுகம் செய்தது ஹோண்டா.
இதுவரையிலான வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறிப்போன தோற்றத்தில் ஆச்சர்யம் அளிக்கிறது புதிய அமேஸ் கார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான அமேஸ் கார், தற்போது மேம்படுத்தப்பட்ட பிறகும் பழையை சப்-4 மீட்டர் செடான் மாடலிலேயே தொடர்கிறது.
புதிய அமேஸ் காரின் முன்பக்க பகுதியை பார்க்கும் போது 10வது தலைமுறை அக்கார்டு காரின் தோற்றத்தை தருகிறது. மேலும் பல ப்ரீமியம் தர வடிவமைப்புகளையும் இந்த காரில் பார்க்க முடிகிறது.
ஹோண்டாவிற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை நிர்வகித்து வரும் அமைப்பு தாய்லாந்தில் செயல்பட்டு வருகிறது. அங்குதான் இந்த இரண்டாவது தலைமுறை அமேஸ் கார் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மாடலை விட புதிய மாடலில் பானட் முன்பக்கம் கொஞ்சம் நீண்டுள்ளது. அதேபோல காரின் முகப்பு விளக்குகளுக்கு மிக நெருக்கமாக முன்பக்க க்ரில் அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
புதிய அமேஸ் காரின் முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகளுடன் உள்ளது. இது காரின் முன்பக்க பகுதிக்கு ஸ்டைலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
முன்னர் இருந்த மாடலில் 14 இஞ்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய தலைமுறை அமேஸ் காரில் 15 இஞ்ச் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.
காரின் பூட் பகுதி மிகவும் கூர்மையான தோற்றத்திலும் தற்போதைய மாடலை விட சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் காரின் எல்.இ.டி டெயில் விளக்குகளும் அசரடிக்கின்றன.
ராஜஸ்தான் தபுகாரா பகுதியில் ஹோண்டாவிற்கான ஆலை இயங்கி வருகிறது. அங்கு தான் புதிய அமேஸ் காருக்கான எஞ்சின் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போதையே அதே 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் தான் 2018 அமேஸ் காரிலும் தொடர்கிறது. இது அதிகப்பட்சமாக 88 பிஎச்பி பவரை வழங்கும்.
ஆனால் இம்முறை புதிய டீசல் ஐ-டிடிடெக் எஞ்சின் இரண்டாவது தலைமுறைக்கான அமேஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரை வழங்கும்.
பெட்ரோல் அமேஸ் காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டீசல் அமேஸ் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும்.
இதுதவிர காரின் உள்கட்டமைப்பில் 7 இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக்கொள்ளூம் வசதி, நேவிகேஷன் உட்பட பல தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது.
முற்றிலும் ஆளே மாறிப்போன விதமாக இருக்கும் புதிய அமேஸ் காரின் வடிவமைப்பு நுணுக்கங்கள் ஹோண்டாவின் மற்றொரு செடான் கார்களான சிட்டி மற்றும் அக்கார்டு மாடல்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.
வெளிப்படையாக பார்த்தால், புதிய தலைமுறை அமேஸ் கார் ஒரு மினி-சிட்டி கார் என்று கூட சொல்லலாம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த கார் ஒருவருட காத்திருப்பிற்கு பிறகு தான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்தியாவில் சப்-காம்பேக்ட் செடான் காரை பொறுத்தவரை மாருதி சுஸுகி டிசையர் தான் விற்பனையில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.
அதை தூக்கி சாப்பிடும் நோக்கில் தான் முற்றிலும் தலைகீழாக திருப்பிப்போட்டது போல புதிய அமேஸ் காரை வெளியிட்டுள்ளது ஹோண்டா.
தவிர இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸென்ட், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ, டாடா டிகோர், ஜெஸ்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் போன்ற கார்களுக்கும் 2018 ஹோண்டா அமேஸ் சரிநிகர் போட்டியை வழங்க ஆயத்தமாகி வருகிறது.
சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!
சென்னை - பெங்களூர் இடையிலான போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலக பணி, வர்த்தக விஷயமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்து கட்டமைப்பை விரிவாக்கும் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை கருத்தில்கொண்டு சென்னை- பெங்களூர் இடையே புதிய விரைவு சாலை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டது. அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.
சென்னையிலிருந்து பெங்களூரை சாலை மார்க்கமாக அடைவதற்கு இப்போது மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அதில், சென்னையிலிருந்து வேலூர் - கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-7 தற்போது பிரதான போக்குவரத்து தடமாக இருக்கிறது. 372 கிமீ தொலைவுடைய இந்த தடத்தில் 6 முதல் 8 மணிநேரம் பயணிக்க வேண்டிருக்கிறது.
அதேபோன்று, சித்தூர்-கோலார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்4 வழியாக செல்லும்போது 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இதில், சித்தூர் பகுதியில் இருவழித்தடமாக செல்வதால், விபத்து ஆபத்தும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ளது. மற்றொரு வழியானது கிழக்குதொடர்ச்சி மலை வழியாக செல்வதால், அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை.
இந்த சூழலில், சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சாலையானது, சென்னை எல்லைப்பகுதியாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி, பெங்களூர் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒசகோட்டை வரை அமைக்கப்பட இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம்-குடியாத்தம்- வி-கோட்டா- பலம்னேர்- மாலூர்- ஒசகோட்டை வழியாக இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 250 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை திசைக்கு 3 வழித்தடங்கள் வீதம் 6 வழித்தட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலை 90 மீட்டர் அகலமுடையதாக இருக்கும்.
இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஒருவழியில் 45,000 முதல் 60,000 கார்கள் செல்வதற்கு கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.
இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்ட பின்னர், இந்த வழித்தடத்தில் சென்னை பெங்களூர் இடையில் பயண நேரம் 4 மணிநேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மங்களூர் வரை இந்த சாலையை நீடிக்கும் திட்டமும் இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்த மையங்களை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்த சாலை உறுதுணையாக அமையும்.
வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்வீராணம் மற்றும் பானவரம் பகுதிகளில் புதிய தொழிற்பேட்டை அமைவதற்கான சாத்தியக்கூறுகளும், இந்த வழியாக சென்னை- பெங்களுர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஜப்பானிய நிறுவனம் நடத்திய ஆய்வுகளும் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களை ஈர்த்துள்ளன. ராணிபேட்டை- பொன்னப்பன்தாங்கல்- அரக்கோணம் இடையிலான பகுதிகளில் நில மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளன.
சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மறுபுறத்தில் பெங்களூர் எல்லையில் அமைந்துள்ள ஒசக்கோட்டை, நரசப்புரா, கோலார் வரையிலான பகுதிகளில் உள்ள வாகன நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கும் இந்த சாலை சிறப்பான போக்குவரத்தை வழங்கும்.
அதேநேரத்தில், சென்னை- பெங்களூர் இடையே ஏற்கனவே சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், புதிய எக்ஸ்பிரஸ் சாலை தேவையில்லை என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு முறையான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
Picture credit: Wiki Commons
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!