Just In
- 3 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 50 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 3 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
Don't Miss!
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?
ஈரான் நாட்டின் சாய்பா பிராண்டின் கார்கள் இந்தியாவில் உலவி வருகின்றன. அதற்கான காரணம் குறித்த தகவல்களையும், ஸ்பை படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.
Recommended Video
ஈரான் நாட்டை சேர்ந்த சாய்பா நிறுவனத்தின் கார்கள் சோதனை ஓட்டம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழக- கர்நாடக எல்லையில் டிரக்குகளில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த கார்களின் ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனமும், ஈரான் நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பும்[சாய்பா] இணைந்து பட்ஜெட் கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. ரெனோ கார்களை சாய்பா நிறுவனம் அங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதோடு, தற்போது சாய்பா பிராண்டில் கார்களையும் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில், சாய்பா பிராண்டில் விற்பனை செய்யப்படும் ஏரியோ என்ற காரும், டிபா-2 என்ற கார் மாடலும் மேம்பாட்டு பணிக்காக ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த கார்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து இரண்டு திறந்த அமைப்புடைய டிரக்குகளில் பெங்களூரில் உள்ள பாஷ் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழக- கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சுங்கச் சாவடியில் இந்த இரண்டு கார்களும் டிரக்குகளில் வைத்து அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது எடுக்கப்பட்ட படங்களையே இந்த செய்தியில் காண்கிறீர்கள்.
இந்த கார்களை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிப் பணி மற்றும் சோதனை ஓட்டங்களுக்காக ரெனோ நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், சென்னையில் உள்ள ரெனோ- நிஸான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திலும் இந்த கார்கள் ஆய்வுகள் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
ஸ்பை படங்களில் நீங்கள் பார்க்கும் இரண்டு கார்களுமே இடதுபக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்டது. இந்த கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 126 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
1965ம் ஆண்டு சாய்பா கார் நிறுவனம் துவங்கப்பட்டது. சிட்ரோவன், ரெனோ- நிஸான் மற்றும் கியா ஆகிய நிறுவனங்களின் கார்களை ஈரானில் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது.
தற்போது சாய்பா பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் ரக கார் மாடல்களாக இவை இருக்கின்றன. குறைவான விலை மாடலும், விலை உயர்ந்த சாய்பா டிபா கார்களும் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?