புதிய மாருதி எர்டிகா கார் அறிமுக விபரம் குறித்த புதிய தகவல்கள்!!
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, வரும் அக்டோபர் மாதம் இந்த புதிய எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு வெளிவரும் என்று தெள்ளத்தெளிவாய் கூறியுள்ளது.
புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அண்மையில் மேம்படுத்தப்பட்ட சியாஸ் பேஸ்லிப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது மாருதி சுஸுகி. இதைத்தொடர்ந்து, புதிய எர்டிகா காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, வரும் அக்டோபர் மாதம் இந்த புதிய எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு வெளிவரும் என்று தெள்ளத்தெளிவாய் கூறியுள்ளது.

தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வாகனத்தை அறிமுகம் செய்து இருதரப்பு வடிக்கையாளரையும் குவிக்க திட்டமிட்டுள்ளது. இந்நேரமே விற்பனையில் சாதனை படைக்க உகந்த நேரம் என அத்துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த மாருதி சுசூகி எர்டிகா வாகனம் நாடெங்கிலும் உள்ள நெக்ஸா வாடிக்கையாளர் சேவை மையங்களின் மூலம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது.

டிசையர் டூர் போலவே பழைய எர்டிகா டூர் வாகனம் தொடர்ந்து சந்தையில் விற்பனையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. முக்கிய வாடிக்கையாளர்களை குறிவைத்த இந்த எர்டிகா டூர் வாகனங்கள் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புற தோற்றதை பார்க்கையில் புதிய எர்டிகா முற்றிலும் மாறுபட்ட முன் பக்க தோற்றம் மற்றம் அழகிய பாதுகாப்பு க்ரில் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும் புகையிலும் தெளிவாய் சாலையை விளக்கும் முன் பக்க சிறப்பு விளக்குகள் இதன் முக்கியம்சம்.

தற்போது உள்ள எர்டிகாவை விட இது பலமடங்கு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெற்றி நடை போடும். இடது வலது புறத்தோற்றங்கள் மிதக்கும் கூரையுடன் அழகிய அல்லோய் வீல்களினால் அம்சமாய் உள்ளது.

L வடிவிலான பின்பக்க சிகப்பு விளக்கு LED தொழில்நுட்பத்தில் பின்பக்கத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. க்ரோமினால் ஒரு கொடு பின்பக்கத்தை வருடி தனியே பிரித்து காட்டி அழகை வெளிக்கொணர்கிறது. வலுவான பம்பர் இதன் பாதுகாப்பை அதன் உச்சிக்கே எடுத்து செல்லும்.

உட்பக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் டச் திரை இணைந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளது. வெளித்தோற்றத்திற்கு ஏற்ற எடுப்பான நிறத்தை அமையப்பெற்ற சொகுசு இருக்கைகள் காற்றில் பறக்க ஏதுவாய் இருக்கும்.

முதன் முதலாய் சியாஸ் வாகனத்தில் அறிமுகப்படுத்தபட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் இதிலும் பொறுத்தப்பட்டுள்ளது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்படும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் என தேவைக்கேற்ப இதனை நாம் தேர்வுசெய்து கொள்ளலாம்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள எர்டிகா வாகனத்தை விட இது நல்ல வரவேற்பை பெரும் என்பது நிசப்தம். மேலும் இதன் தொழில்நுட்பங்கள், சிறப்பம்சங்கள், பாதுகாப்பு, தோற்றம், கட்டுமானம், வர்ணம், உட்புற வேலைப்பாடுகள் அனைத்தும் இதன் பழைய வாகனத்தை மட்டுமில்லாமல் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மரஸ்ஸோ போன்றவற்றை பின்னுக்கு தள்ளும்.
More from DriveSpark
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக, மஹிந்திரா மராஸ்ஸோ கார், சமீபத்தில் லான்ச் செய்யப்பட்டது. அதன் போட்டோ ஆல்பம்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








