ரேபிட் செடான் காருக்கு மேலும் பாதுகாப்பு கட்டமைப்பை வலிமைப்படுத்திய ஸ்கோடா..!!
ரேபிட் செடான் காருக்கு மேலும் பாதுகாப்பு கட்டமைப்பை வலிமைப்படுத்திய ஸ்கோடா..!!
Recommended Video

உலகளவில் முன்னணி கார் தயாரிப்பாளராக உள்ள ஸ்கோடா, தனது ரேபிட் மாடலில் பாதுகாப்பு காரணங்களுக்கான கட்டமைப்புகளை இருமடங்கு பலப்படுத்தியுள்ளது.

செடான் மாடல் கார்களில் பெரிய விற்பனை திறனை இந்தியாவில் பதிவு செய்து வரும் கார் ஸ்கோடா ரேபிட்.
இந்த காரின் முன்பகுதியில் பயணர்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே இரண்டு ஏர் பேக் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது ரேபிட் மாடலில் ஏர் பேக் பாதுகாப்பு வசதி பின்பகுதி இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.

மொத்தம் நான்கு ஏர்பேகுகள் கொண்ட பாதுகாப்பு வசதிகள், ரேபிட் செடான் காரின் உயர் ரக வேரியன்டில் இடம்பெற்றிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செடான் கார் விற்பனையில் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாயின் வெர்னா ஆகிய மாடல்கள் கொடிக்கட்டி பறக்கின்றன.

இந்த கார்களின் டாப்-வேரியன்ட் மாடலில் பாதுகாப்பு காரணங்களுக்காக 6 ஏர் பேகுகள் இடம்பெற்றுள்ளன.
செடான் விற்பனையில் இந்த கார்களுக்கு சரிநிகர் போட்டியை வழங்கவே தற்போது ரேபிட் மாடலில் 4 ஏர்பேகுகள் வழங்கப்பட்டுள்ளன.
Trending On DriveSpark Tamil:

ஸ்கோடா ரேபிட் ஸ்டைல் வேரியன்டுகளின் விலை பட்டியல்:
| வேரியன்டுகள் | விலை |
| 1.6 பெட்ரோல் (மேனுவல் கியர்பாக்ஸ்) | ரூ. 11.85 லட்சம் |
| 1.6 பெட்ரோல் (ஆட்டோமேட்டிக்) | ரூ. 11.85 லட்சம் |
| 1.5 டீசல் (மேனுவல் கியர்பாக்ஸ்) | ரூ. 12.42 லட்சம் |
| 1.5 டீசல் (ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்) | ரூ. 13.56லட்சம் |

தற்போது பாதுகாப்பு கட்டமைப்புகளை அதிகப்படுத்தியிருந்தாலும், இது ரேபிட் மாடலுக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகம் தான்.
இதற்கு சரிநிகர் போட்டியை சந்தையில் ஏற்படுத்தி வரும் சிட்டி மற்றும் வெர்னா மாடல்களில் ஏற்கனவே 6 ஏர்பேகுகள் இருப்பதனால்.

புதிய ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் காரின் சந்தை நிலவரத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும் இந்த அறிவிப்பு ஆட்டோதுறையில் சிறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தான் உள்ளது.

சிட்டி மற்றும் வெர்னா போலவே இந்தியாவின் காம்பேக்ட் செடான் ரக காரில், ஃபோக்ஸ்வேகன் வென்டோ மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் கார்களும் நல்ல விற்பனையை பதிவு செய்து வருகின்றன.

ஆனால் ஃபோக்ஸ்வேகனின் வென்டோ காரின் டாப் வேரியன்டில் இரண்டு ஏர்-பேக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மாருதி சுஸுகியின் சியாஸ் காரிலும் இதுவரை இரண்டு ஏர்-பேகுகள் தான் உள்ளன.
Trending On DriveSpark Tamil:

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விழாவில் ஸ்கோடா நிறுவனம் ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஆக்டிவ், ஏம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வித மாடல்களில் அறிமுகம் செய்தது.

வெறும் பாதுகாப்பு காரணங்களை மட்டும் பலப்படுத்தாமல், ரேபிட் காரின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புகளிலும் பல்வேறு அழகியல் மாற்றங்கள், புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

செயல்திறன் தேவைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படாத நிலையில் 1.6 லிட்டர் எம்.பி.ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டிடிஐ டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மாடல் ரேபிட் கார் மூலம் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி பவர் மற்றும் 153 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். அதேபோல டீசல் எஞ்சின் மூலம் 108 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் தேவையில் 6-ஸ்பீடு டிப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் தேவையில் வருகிறது.

அதேபோல டீசல் தேர்வு எஞ்சின் கொண்ட ரேபிட் காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் தேவையை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விற்பனையாகும் செடான் கார் செக்மென்டில் ஸ்கோடா நிறுவனம் ரேபிட் மாடலை முன்னிறுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அதற்காகவே தற்போது இந்த 4 ஏர்பேகுகள் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே செடான் விற்பனையில் முன்னணியில் உள்ள ரேபிட் காருக்கு இந்த கூடுதல் விரிவாக்கம் மேலும் விற்பனையை அதிகரிக்கும் என்பது தான் பல வாகன துறை ஆர்வலர்களின் கருத்து.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








