Just In
- 29 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 43 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 51 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி!!
பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை சுஸுகி கார் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.தென் இந்தியாவில் தனது டீலர்களுக்கு விரைவில் கார்களை அனுப்பும் விதத்தில், ட
பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை சுஸுகி கார் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனமும் இந்தியாவில் தங்களது சில கார் மாடல்களை இரு பிராண்டிலும் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்கள் டொயோட்டா பிராண்டிலும், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி சுஸுகி பிராண்டிலும் வர இருப்பதாக சொல்லி இருந்தோம்.
இந்த நிலையில், இந்த கூட்டணி தற்போது அடுத்தக் கட்டப் பணிகளில் இறங்கி இருக்கிறது. அண்மையில் பெங்களூரில் உள்ள டொயோடடா ஆலைக்கு மாருதி சுஸுகி அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இதன்படி, பெங்களூர் ஆலையில் மாருதி சுஸுகி கார்களை உற்பத்தி செய்யும் விதமாக, ஆலையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்காக, மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனம் ரூ.7,000 கோடியை பெங்களூரில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் ஆலையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், தற்போது 50 சதவீத அளவுக்குத்தான் இங்கு கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எனவே, டொயோட்டா ஆலையின் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், மாருதி கார்கள் இங்கு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும், பெங்களூர் அருகே தும்கூரில் உள்ள கர்நாடக ஜப்பானிய தொழில் முனையத்தில் மாருதி கார்களுக்கான உதிரிபாக சப்ளையர்களின் ஆலைகளையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி கார் நிறுவனம் ஹரியானாவில் 2 கார் ஆலைகளையும், குஜராத்தில் ஒரு கார் ஆலையையும் வைத்திருக்கிறது. இந்த நிலையில், தென் இந்தியாவில் தனது டீலர்களுக்கு விரைவில் கார்களை அனுப்பும் விதத்தில், டொயோட்டா ஆலையை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு செல்ல இருக்கும் மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள் பெங்களூர் பிடதியில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருப்பது பழைய செய்திதான். ஆனால், இந்த புதிய முதலீட்டு திட்டத்தின்படி, பெரும்பாலான மாருதி கார்கள் இதே டொயோட்டா ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறதுத.
வரும் 2022ம் ஆண்டில் தென் இந்தியாவிற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு டொயோட்டா ஆலையை பயன்படுத்தி கார் உற்பத்தி செய்ய மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இரு நிறுவனங்களும் பயன்பெறும்.
அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாருதி சியாஸ் காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்திருந்தோம்.
இதே பெட்ரோல் எஞ்சினை டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரிலும் பயன்படுத்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்த எஞ்சின் சுஸுகி எஞ்சினியர்களால் ஜப்பானில் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!